17 ஆண்டுகள் நீடிக்கும் புதன் மகாதிசை! ராஜ போக வாழ்க்கை அமையும்!

ஜோதிடத்தில், புதன் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுகிறது. இந்த கிரகத்தின் பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 8, 2023, 11:17 PM IST
  • பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுதலை.
  • வாழ்க்கை துணையுடன் இனிமையான உறவுகள் அமையும்.
  • திருமணம் வாழ்க்கை மகிழ்ச்சிகள் நிறைந்ததாக இருக்கும்
17 ஆண்டுகள் நீடிக்கும் புதன் மகாதிசை!  ராஜ போக வாழ்க்கை அமையும்! title=

ஜோதிடத்தில், புதன் அனைத்து கிரகங்களுக்கும் இளவரசன் என்று அழைக்கப்படுகிறது. புதன் கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற 25 நாட்கள் ஆகும். புத்திசாலித்தனம், பகுத்தறிவு திறன், திறமை ஆகியவற்றின் காரணியாக புதன் கருதப்படுகிறது. புதன் தன்னுடன் இருக்கும் கிரகத்திற்கு ஏற்ப பலன்களைத் தருகிறது. அத்தகைய சூழ்நிலையில், புதனின் மகாதசையும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. யாருடைய ஜாதகத்தில் புதன் சுப ஸ்தானத்தில் இருக்கிறாரோ, அவர்களுக்கு மகாதசையின் போது பல நன்மைகள் கிடைக்கும்.

ஆடம்பரமான உல்லாசமான வாழ்க்கை

ஜோதிடத்தில், புதனின் மகாதசை மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. எந்தவொரு நபருக்கும் அவரது மகாதசை 17 ஆண்டுகள் நீடிக்கும். இது ஒரு நபரின் நுண்ணறிவு, தகவல் தொடர்பு, படைப்பாற்றல் ஆகியவற்றை பாதிக்கிறது. ஒருவரது ஜாதகத்தில் புதன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அவர் 17 வருடங்கள் ஆடம்பரமான உல்லாசமான வழ்க்கையை அனுபவிப்பார். மறுபுறம், ஜாதகத்தில் புதன் லவீனமான நிலை இருக்கும்போது, ​​​​ஒருவரின் புத்தி குழப்பமடைந்து, இலக்கை அடைவதற்கான தனது நோக்கத்திலிருந்து அவர் விலகுகிறார்.

புதனின் மகாதிசையில் புதனின் அந்தர்திசை பலன்கள்

புதனின் மகாதிசையில் புதனின் அந்தர்திசை இருக்கும்போது ஒருவருக்கு ஆன்மீகத்தின் மீதான அதிகரிக்கிறது. ஒவ்வொரு வேலையையும் கவனத்துடன் செய்யத் தொடங்குவார்கள். புதனின் அருளால் ஒருவன் மிகுந்த பண்டிதனாகிறான். பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து ஒருவர் விடுதலை பெறுகிறார். புதன் மகாதிசையின் போது அறிவு, கலை முதலிய குணங்களால் நாடு, உலகம், சமுதாயம் ஆகியவற்றில் மரியாதையும் புகழும் பெறுகிறார்.

மேலும் படிக்க | மேஷத்தில் குரு பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு பம்பர் ஜாக்பாட் லாபம்

புதனின் மகாதசையில் சூரியனின் அந்தர்திசை பலன்கள்

புதனின் மகாதசையில் சூரியனின் அந்தர்திசை இருக்கும் போது மனிதனுக்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும். அரசு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மறுபுறம், சந்திரன் அதன் துணைக் காலத்தில் இருக்கும்போது அந்த ஜாதகர் அமைதியான வாழ்க்கையை நடத்துகிறார். குடும்பத்துடன் நல்லுறவு உண்டாகும். 

புதன் மகாதிசையில் சுக்கிரனின் அந்தர்திசை பலன்கள்

புதன் மகாதிசையில் சுக்கிரனின் அந்தர்திசை இருக்கும் போது ஒரு நபருக்கு நல்ல நிதி பலன்களைத் தருகிறது. வாழ்க்கை துணையுடன் இனிமையான உறவுகள் அமையும். திருமணம் வாழ்க்கை மகிழ்ச்சிகள் நிறைந்ததாக இருக்கும்

புதன் மகாதிசையில் குரு அந்தர்திசை பலன்கள்

வியாழனின் அந்தர்தசா ஒரு நபருக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த காலத்தில் மன அமைதி கிடைக்கும். வாழ்க்கையில் வாட்டி வந்த பிரச்சனைகள் தீரும். மலை போல் வந்த துன்பங்கள் யாவும் பணி போல் நீங்கி விடும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்! இந்த 4 ராசிக்கார்கள் ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News