செவ்வாய் பெயர்ச்சி: ஆகஸ்ட் 10 வரை இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்

Mangal Gochar Effect 2022: இந்த செவ்வாய்ப் பெயர்ச்சியின் சாதகமான பலன் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் காணப்படும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை விரிவாக இங்கே காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 19, 2022, 08:40 AM IST
  • 3 ராசிக்காரர்களுக்கு பொற்காலம்
  • செவ்வாய் பெயர்ச்சியின் பலன்கள்
  • வருமானத்தில் நல்ல அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பு
செவ்வாய் பெயர்ச்சி: ஆகஸ்ட் 10 வரை இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் title=

ஜோதிடத்தில், அவ்வப்போது ஏற்படும் கிரகங்களின் ராசி மாற்றமானது அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. ஒரு ராசி மற்றொரு ராசிக்குள் நுழைவதை நாம் பெயர்ச்சி என்று அழைக்கிறோம். இந்த பெரியர்ச்சியின் சுப மற்றும் அசுப பலன்களை அனைத்து 12 ராசிகளிலும் நாம் கான முடியும். இந்த போக்குவரத்து சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கும். அந்தவகையில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி செவ்வாய் கிரகம் மேஷ ராசியில் நுழைந்து தற்போது வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார். இதன் போது குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியின் பலன் தென்படும். எனவே அந்த மூன்று ராசிக்காரர்கள் யார் என்பதை விரிவாக காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை பொற்காலம்

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார் 

மிதுனம் - வருமானம் மற்றும் லாப வீடாகக் கருதப்படும் மிதுன ராசியின் ஜாதகத்தில் இருந்து 11 ஆம் வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி ஆகுகிறார். இந்த காலகட்டத்தில் வருமானத்தில் நல்ல அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதே சமயம் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். செவ்வாய்ப் பெயர்ச்சி உங்கள் நிதிப் பக்கத்தை பலப்படுத்தும். அத்துடன் செவ்வாய்ப் பெயர்ச்சியின் போது, ​​வேலை செய்யும் பாணியிலும் ஒரு நேர்த்தி இருக்கும். இந்த காலகட்டத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். மிதுன ராசியின் ஏழாம் இடத்தின் அதிபதி செவ்வாய் கிரகம் என்பதால் உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவை நீங்கள் பெறலாம். இவர்கள் மரகத ரத்தினத்தை அணிவது நன்மை தரும். 

கடகம் - கடக ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி நடந்துள்ளது. இது பணியிடம் மற்றும் வேலையின் இடம் என்று கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்த விரும்பினால், இந்த நேரம் சாதகமானது. செவ்வாய்ப் பெயர்ச்சியில் சொத்து, வாகனப் பரிவர்த்தனையிலும் நல்ல பண ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் ஒரு பெரிய ஒப்பந்தம் முடியும். இந்த நேரத்தில் முத்து ரத்தினத்தை அணிவது உங்களுக்கு சாதகமாக பலனை தரும். 

சிம்மம் - உங்கள் ராசியின் சஞ்சாரம் ஜாதகத்தின் ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி நடந்துள்ளது. இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்தின் வீடாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் முழு ஆதரவை சிம்ம ராசிக்காரர்கள் பெறுவார்கள். அதே சமயம் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் வேலை முழுமையாக செய்து முடிப்பீர்கள். இந்த நேரத்தில், வணிகம் தொடர்பாக பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன, இது எதிர்காலத்தில் நன்மை பயக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்களும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் சிறப்புப் பலன்களுக்காக பவள ரத்தினத்தை அணியலாம்.'

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News