பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி இறுதி ஓவரில் வெற்றி...

IPL 2019 தொடரின் 37-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது!

Last Updated : Apr 20, 2019, 11:56 PM IST
பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி இறுதி ஓவரில் வெற்றி... title=

IPL 2019 தொடரின் 37-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது!

IPL 2019 தொடரின் 37-வது லீக் ஆட்டம் இன்று டெல்லி பெரோஸ் ஷா மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது, இதையடுத்து பஞ்சாப் அணி தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 12(9) ரன்களகுக்கு வெளியேற, மறு முனையில் கிறிஸ் கெயில் அதிரடியாக விளையாடி 69(37) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக மந்தீப் சிங் 30(27) ரன்கள் குவித்தார், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது.

டெல்லி அணியின் சந்தீப் லமிச்சான் 3 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

துவக்க ஆட்டக்காரர் பிரித்திவி ஷா 13(11) ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றிய போதிலும், ஷிகர் தவான் 56(41), ஸ்ரேயஸ் ஐயர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 58*(49) ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் 19.4-வது பந்தில் வெற்றி இலக்கை எட்டிய டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்ததன் மூலம் இப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Trending News