கொரோனா-வுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடும் கிரிக்கெட் வீரர்...

கொரோனா வைரஸுக்கு களத்தில் இறங்கி போராடி வரும் நிஜ உலக ஹீரோ ஜோகிந்தர் சர்மாவுக்கு மரியாதை செலுத்துவதாக ICC தெரிவித்துள்ளது.

Last Updated : Mar 29, 2020, 03:17 PM IST
கொரோனா-வுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடும் கிரிக்கெட் வீரர்... title=

கொரோனா வைரஸுக்கு களத்தில் இறங்கி போராடி வரும் நிஜ உலக ஹீரோ ஜோகிந்தர் சர்மாவுக்கு மரியாதை செலுத்துவதாக ICC தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) சனிக்கிழமை, இந்தியாவின் 2007 டி20 உலகக் கோப்பை வீரர் ஜோகிந்தர் சர்மாவை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் கடுமையான காலங்களில் தேசத்திற்கு செய்த சேவைக்காக பாராட்டியுள்ளது. ஹரியானா காவல்துறையில் DSP-யாக தனது கிரிக்கெட்டுக்கு பிந்தைய வாழ்க்கையை செலவழித்த ஷர்மா, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தற்போது களத்தில் இறங்கி போராடி வருகின்றார். 

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தற்போது இந்தியா 21 நாள் முழுஅடைப்பில் உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஹரியானா காவல்துறையில் தற்போது பணியாற்றி வரும் சர்மா மக்களை பாதுகாக்கும் பணியில் ரோட்டில் இறங்கி பணியாற்றி வருகின்றார். அவரது செயலை பாராட்டும் விதமாக தற்போது ICC தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கைப்பிடிப்பில் ஜோகிந்தர் சர்மாவை பாராட்டியுள்ளது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ICC பதிவிடுகையில்., “2007: #T20WorldCup hero2020: உண்மையான உலக ஹீரோ" என குறிப்பிட்டுள்ளது.

தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பிற்பகுதியில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் ஜோகிந்தர் சர்மா உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் தங்கள் முயற்சியைச் செய்தவர்களில் ஒருவராக இருந்து வருகின்றார்.

2007-ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் முதல் டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றதில் சர்மா மிகவும் பிரபலமான இறுதி ஓவரை வீசினார். மூன்றாவது பந்தில் மிஸ்பா-உல்-ஹக்கின் கடைசி விக்கெட்டை சர்மா கைப்பற்றியதால் இந்த ஆட்டத்தை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

Trending News