3_வது டெஸ்ட்: இந்திய அணி 603 ரன்களுக்கு டிக்ளேர்

ராஞ்சி: இந்திய ஆஸ்திரேலியா-வின் 3-வது டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 451 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 178 ரன் விளாசினார். 

Last Updated : Mar 19, 2017, 04:56 PM IST
3_வது டெஸ்ட்: இந்திய அணி 603 ரன்களுக்கு டிக்ளேர் title=

ராஞ்சி: ராஞ்சி: இந்திய ஆஸ்திரேலியா-வின் 3-வது டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 451 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 178 ரன் விளாசினார். 

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடந்த 2-வது டெஸ்டில் 

இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதையடுத்து இந்த தொடரில் இரு அணிகளும் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 16-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரென்ஷா, வார்னர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 50 ரன்கள் இருக்கும் போது ஆஸ்திரேலியா தனது முதல் விக்கெட்டை இழந்தது. வார்னர் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் ஸ்மித் களம் இறங்கினார். அடுத்தடுத்து விக்கெட் விழ 5-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். முதல் நாளில் ஸ்மித் சிறப்பாக விளையாடி 244 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் மேக்ஸ்வெல் நன்றாக விளையாடி தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் களத்தில் இருந்தனர். 

இந்தியா முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன் எடுத்துள்ளது. ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்திருந்தது. 

பின்னர் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 137.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 451 ரன்கள் எடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் 40 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது. ராகுல் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்த மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 130 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 360 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 130 ரன்களுடனும்,  சாகா 18 ரன்களுடனும், களத்தில் உள்ளனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை விட 91 ரன்கள் பின் தங்கியுள்ளது. 

4-வது நாளன இன்றைய போட்டியிலும் புஜாரா மற்றும் விருத்திமான் சஹா கூட்டணியானது வெற்றிக் கூட்டணியாக நகர்ந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் புஜாரா 202 ரன்களும் சஹா 117 ரன்களும் ,முரளி விஜய் 87 ரன்களும் , ஜடேஜா 54 ரன்களும் எடுத்தனர். 

Trending News