மீண்டும் வென்றது லக்னோ... பேட்டிங்கில் சொதப்பிய டெல்லி

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை லக்னோ அணி வீழ்த்தியது.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 1, 2022, 07:46 PM IST
  • டெல்லியை வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • 7 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி
  • தொடரும் லக்னோவின் வெற்றி
மீண்டும் வென்றது லக்னோ... பேட்டிங்கில் சொதப்பிய டெல்லி title=

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.

மும்பை வான்கடேவில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து டி காக்கும், ராகுலும் தொடக்கம் தந்தனர்.

இந்த ஜோடி ஐந்தாவது ஓவரிலேயே பிரிந்தது. டி காக் 23 ரன்கள் எடுத்து ஷர்துல் தாக்கூர் ஓவரில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஹூடாவும், ராகுலும் இணைந்தனர்.

Delhi Capitals

இந்த ஜோடி டெல்லியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு அதிரடி காட்டியது. ராகுல் 35 பந்துகளில் தனது அரை சதத்தை அடிக்க, ஹூடா 32 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.

தொடர்ந்து இந்த ஜோடி அதிரடியாக விளையாடி டெல்லி அணிக்கு தலைவலியை கொடுத்தது. 15ஆவது ஓவரை வீசிய ஷர்துல் தாக்கூர் ஹூடாவை 52 ரன்களில் வெளியேற்றி ஆறுதல் அளித்தார். அதன் பின் ஸ்டாய்னிஸுடன் இணைந்த ராகுல் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 195 ரன்கள் எடுத்தது. 

Prithvi

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னரும், ப்ரித்வி ஷாவும் தொடக்கம் தந்தனர். ப்ரித்வி ஷா ஒரு பவுண்டரி அடித்த கையோடு ஐந்து ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினார்.

அவர் வெளியேறியதை அடுத்து வார்னரும் மூன்று ரன்களில் அவுட்டானார். இதனால் அந்த அணி மூன்றாவது ஓவரில் 13 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மேலும் படிக்க | தொடரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி... வீழ்ந்தது பஞ்சாப்

இக்கட்டான நிலையில் களமிறங்கிய கேப்டன் பண்ட் க்ருனால் பாண்டியா வீசிய 4ஆவது ஓவரில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்து அதிரடி காட்டினார். தொடர்ந்து விளையாடிய மிட்செலும், பண்ட்டும் லக்னோவின் பந்துவீச்சை சிதறடித்தனர். இதன் காரணமாக அந்த அணி பவர் ப்ளே முடிவில் 66 ரன்களை குவித்தது.

Delhi

தொடர்ந்து அதிரடியாக ஆடிய மிட்செல் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அவருக்கு அடுத்து வந்த லலித் 3 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து பண்ட்டும், பவலும் ஜோடி சேர்ந்து அதிரடியாகவே ரன்களை சேர்த்தனர். ஆனால் 13ஆவது ஓவரில் பண்ட் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

மேலும் படிக்க |ரோஹித் ஷர்மா முன் உள்ள மிகப்பெரிய சவால்கள்!

அவருக்கு அடுத்து பவலும், அக்சர் படேலும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் முனைப்பில் விளையாடினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பவல் ஆட்டத்தின் 17ஆவது ஓவரில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.அதன் பிறகு வந்த வீரர்கள் சோபிக்காமல் போக இறுதியில் டெல்லி அணி 189 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் லக்னோ அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News