ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் விடுவிக்கும் அந்த 3 வீரர்கள்..! ஜோப்ரா ஆர்ச்சர் அவுட்

ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன் மும்பை இந்தியன்ஸ் 3 வெளிநாட்டு வீரர்களை விடுவிக்கலாம். இதில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பெயரும் அடங்கும். இது தவிர, மேலும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் விடுவிக்க வாய்ப்புள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 25, 2023, 01:57 PM IST
  • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நெருக்கடி
  • கேம்ரூன் கிரீன், ரிலே மெரிடித் விடுவிப்பு
  • ரோகித் சர்மாவின் இடமும் கேள்விக்குறி
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் விடுவிக்கும் அந்த 3 வீரர்கள்..! ஜோப்ரா ஆர்ச்சர்  அவுட் title=

ஐபிஎல் 2024 ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை 26 நவம்பர் 2023 மாலைக்குள், அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்கவைக்கப்பட்ட அல்லது விடுவிக்கப்பட்ட வீரர்களின் பெயர்களை பிசிசிஐயிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தவகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருஊந்து 3 வெளிநாட்டு பிளேயர்கள் விடுவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அந்த 3 பிளேயர்கள் யார்? என்பதை பார்க்கலாம்.

1. ஜோஃப்ரா ஆர்ச்சர்

மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை ரூ.15 கோடிக்கு சேர்க்க இருக்கிறது. இதனால் அந்த அணியிடம் ஏலத்தில் சுமார் 5 கோடி ரூபாய் மட்டுமே பர்ஸ்ஸில் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி சில பெரிய வீரர்களை விடுவிக்க வேண்டும். இந்த காரணத்திற்காக, கடந்த இரண்டு சீசன்களில் அணியுடன் இருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் விடுவிக்கப்படுவர்களில் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். முதல் சீசனில் அவர் விளையாடவில்லை. 2023 சீசனில் சில போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. அப்படிப்பட்ட நிலையில் ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட ஆர்ச்சர் விடுக்கவிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

மேலும் படிக்க | திரைமறைவில் பல கோடிகளை கொட்டி பாண்டியாவை தூக்கிய மும்பை - அம்பானி மாஸ்டர் பிளான்

2. ரிலே மெரிடித்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித்தையும் மும்பை இந்தியன்ஸ் விடுவிக்கலாம். ஜெய் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக கடந்த ஆண்டு அவர் அணியில் சேர்க்கப்பட்டார். மெரிடித் ரூ 1.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸில் சேர்க்கப்பட்டார். ஆனால் இந்த ஏலத்துக்கு முன்பாக மெரிடித் விடுவிக்கப்படலாம். ஏனெனில் ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸூக்கு திரும்பியுள்ளார். மேலும், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் அணியில் நம்பிக்கைகுரியவர்களாக இருப்பதால் ரிலே மெரிடித் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

3. கேமரூன் கிரீன்

மும்பை இந்தியன்ஸ் கேமரூன் கிரீனையும் விடுவிக்கலாம். ஐபிஎல் 2023 ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அவரை ரூ.17.50 கோடிக்கு வாங்கியது. ஆல்-ரவுண்டராக அவர் அணிக்காக சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அணி அவருக்கு ஒரு பெரிய தொகையை செலவிட்டது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அவரது செயல்திறன் மும்பை இந்தியன்ஸுக்கு வலுவாக இருந்தது. குறைவான தொகை மட்டுமே எஞ்சியிருப்பதால் இவரை விடுவிக்க வேண்டிய நெருக்கடி அந்த அணிக்கு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | இனி சூர்யகுமார் யாதவ் வேண்டாம்... இந்த வீரர் போதும் - பலமாகும் இந்திய அணி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News