கோலி தான் டாப்... சதத்தை தொடர்ந்து புதிய சாதனை - என்ன தெரியுமா?

ட்விட்டரில் விராட் கோலியை தற்போது 5 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இதன்மூலம், 5 கோடி பாலோவர்ஸை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 13, 2022, 05:20 PM IST
  • விராட் கோலியை சமூக வலைதளத்தில் மொத்தம் 30.1 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.
  • இன்ஸ்டாகிராமில் மட்டும் 21.1 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.
  • 3 ஆண்டுகளுக்கு பிறகு செப். 8ஆம் தேதி, தனது 71ஆவது சதத்தை அவர் அடித்தார்.
கோலி தான் டாப்... சதத்தை தொடர்ந்து புதிய சாதனை - என்ன தெரியுமா? title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி கடந்த 3 மூன்றாண்டுகளாக பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வந்தார். தனது 70ஆவது சதத்திற்கு பிறகு, அடுத்த சதத்தை பதிவு  செய்ய அவருக்கு சுமார் 1020 நாள்கள் எடுத்தது. 

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது, அவர் தனது 70ஆவது சதத்தை அடித்திருந்தார். அதையடுத்து, செப்.8ஆம் தேதி நடைபெற்ற ஆப்கனுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில்தான் தனது அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 71ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். 

பேட்டால் பதிலடி கொடுத்த விராட்

இந்த இரண்டு சதங்களுக்கும் இடையில் அவரிடம் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. மூன்று கிரிக்கெட் வடிவங்களிலும் தனது கேப்டன் பொறுப்பை துறந்த அவர், ஐபிஎல் தொடரிலும் கூட பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். தற்போது, டி20 உலகக்கோப்பை நெருங்கிவரும் நிலையில், அவரை அணியில் சேர்க்கலாமா வேண்டாமா என்ற கேள்விகளும் எழுந்தன.

மேலும் படிக்க |ரிஷப் பன்ட் முன்னாள் காதலிக்கு ரூட் போட்ட பாகிஸ்தான் இளம் வீரர்

இந்த அத்தனை விமர்சனங்களையும், கேள்விகளையும் வழக்கம்போல், விராட் தனது பேட்டாலேயே பதிலடிக்கொடுத்துள்ளார். இந்நிலையில், களத்தில் மட்டுமின்றி களத்திற்கு வெளியேவும் விராட் கோலி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகிறார். 

சமூக வலைதளங்களில் விராட் கோலியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது. குறிப்பாக, சமீபத்தில் அவரை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், 5 கோடி பாலோவர்ஸை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். 

மொத்தமாக 30 கோடி பேர்

ட்விட்டர் மட்டுமின்றி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிலும் கோலியின் பாலோவர்ஸ் அதிகரத்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் தற்போது, 211 மில்லியன் (21.1 கோடி) பாலோவர்ஸை விராட் பெற்றுள்ளார். இன்ஸ்டாவில் அதிக பாலோவர்ஸை பெற்ற விளையாட்டு வீரர்களின் வரிசையில் ரொனால்டோ (47.6 கோடி), மெஸ்ஸி (35.6 கோடி), ஆகியோருக்கு அடுத்து விராட் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

பேஸ்புக்கில் விராட் கோலி, 4.9 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இதன்மூலம், விராட் கோலியை அவர் பயன்படுத்தும் சமூக வலைதளங்களிலும் மட்டும் மொத்தம் 310 மில்லியன் (31 கோடி) பாலோவர்ஸ் உள்ளனர். உலகக்கோப்பை தொடர் மட்டுமின்றி, அதற்கு முன் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களிலும் விராட் கோலி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | T20 World Cup: ரோகித் - டிராவிட் கூட்டணியில் இந்த வீரருக்கு பறிபோன இந்திய அணி வாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News