6 மாதமாக 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்! - 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

15 வயது சிறுமியை பாலியல் வீடியோ எடுத்து மிரட்டி 10 பேர் கொண்ட கும்பல் செய்த அட்டூழியம்  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : May 13, 2022, 03:06 PM IST
  • சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்
  • வீடியோவைக் காட்டி மிரட்டி வெறிச்செயல்
  • 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - 4 பேர் கைது - 6 பேர் தலைமறைவு
6 மாதமாக 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்! - 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் title=

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் இஸ்லாம்புரத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்தவர் செம்பு. இவர் அங்குள்ள டெக்கரேஷன் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் செம்பு ஆசை வார்த்தை கூறி உள்ளார். பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செம்பு, அதனை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை அடிக்கடி சிறுமியிடம் காட்டி செம்பு மிரட்டி வந்துள்ளார். தனது நண்பர்களிடமும் ‘தனியாக’ இருக்க வேண்டும் என்றும், இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும் செம்பு பயமுறுத்தி வந்துள்ளார். இந்த மிரட்டலுக்கு பயந்த சிறுமியை, செம்புவின் நண்பர்கள் சிலர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கடந்த 6 மாதங்களாக யாருக்கும் தெரியாமல் சிறுமி மீது இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

மேலும் படிக்க | கேரள நடிகைக்கு பாலியல் கொடுமை - காவியா மாதவனுக்கு முக்கிய பங்கு? கசிந்தது ஆடியோ ஆதாரம்

இந்நிலையில் கடந்த 4ந்தேதி சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரது தந்தை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, உடனடியாக பொதட்டூர் பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் சிறுமியின் தந்தை அளித்த புகாரை பதிவு செய்யவில்லை. இதுகுறித்து கடப்பா போலீஸ் சூப்பிரண்டு அன்பு ராஜனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதுமட்டுமல்லாமல், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பூஜிதா நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான தனிப்படை போலீஸார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அத்தனை பேரையும் தேடி வருகின்றனர். இதில், முதற்கட்டமாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். விரைவில் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | பெற்ற குழந்தையை ரூ.20 ஆயிரத்துக்கு விற்ற தாய்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News