அரசியல் காரணங்களுக்காக குற்றச்சாட்டு : ஓ.பன்னீர்செல்வம்

Last Updated : May 3, 2017, 02:15 PM IST
அரசியல் காரணங்களுக்காக குற்றச்சாட்டு : ஓ.பன்னீர்செல்வம் title=

அரசியல் காரணங்களுக்காகவே ஸ்டாலின் தனக்கே உரிய பாணியில் விதவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மேற்கொண்டுள்ள  ஓ.பன்னீர்செல்வம்.

இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பதவியில் இருந்த போது ஏன் உத்தரவிடவில்லை என்று மு.க.ஸ்டாலின் எழுப்பியிருந்த கேள்வி குறித்து பன்னீர்செல்வத்திடம் கேட்கப்பட்டது

அரசியல் காரணங்களுக்காக மு.க.ஸ்டாலின் அவ்வப்போது தனக்கே உரிய பாணியில் குற்றச்சாட்டுகளை முன் வைத்து அறிக்கைகளை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி உள்ளேன். நான் முதலமைச்சராக இருந்த போது, ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக ஆலோசித்து, விசாரணைக்கு நடவடிக்கை எடுத்தேன். 

ஆனால் எல்லா உண்மைகளும் மக்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதாலேயே நீதி விசாரணை கோருகிறேன்' என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Trending News