எஸ்.டி பிரிவில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Last Updated : May 25, 2016, 05:37 PM IST
எஸ்.டி பிரிவில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் title=

இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழு கூடியது. அக்குழுவில் நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கௌண்டர்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதை பற்றி விவாதங்கள் நடைபெற்றது. அதற்கான சட்ட திருத்த மசோதா நிறைவேற்றுதல் பற்றி ஆலோசனை நடைபெற்றன. 

அதற்கடுத்து நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கௌண்டர்களையும் பழங்குடியினர் அதாவது எஸ்.டி. பிரிவில் சேர்க்க வழிவகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

Trending News