அதிர்ச்சி! குழந்தைகள் விற்பனை: மேலும் 3 பெண்கள் கைது

குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக திருச்செங்கோடு, குமாரபாளையம் மற்றும் பவானியை சேர்ந்த 3 பெண்கள் கைது.

Last Updated : Apr 27, 2019, 12:17 PM IST
அதிர்ச்சி! குழந்தைகள் விற்பனை: மேலும் 3 பெண்கள் கைது title=

குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக திருச்செங்கோடு, குமாரபாளையம் மற்றும் பவானியை சேர்ந்த 3 பெண்கள் கைது.

பெண் செவிலியர் உதவியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ராசிபுரம் அமுதவள்ளி தர்மபுரியை சேர்ந்த சதீஷ்குமாரிடம் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பேரில் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளிபாளையம், சேலம், பரமத்திவேலூர், ராசிபுரம் பகுதிகளில் நர்சாக பணியாற்றிய அமுதவள்ளி 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றதும், அதன்பிறகு வறுமையில் வாடும் குடும்ப பெண்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டார். 

இந்த நிலையில், குழந்தைகள் விற்பனை தொடர்பாக திருச்செங்கோடு, குமாரபாளையம், பவானி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையை தொடர்ந்து 3 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

Trending News