செல்போனால் பறிபோன கல்லூரி மாணவன் உயிர்!

கோயம்புத்தூர் அருகே செல்போன் வெடித்து கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 18, 2021, 06:08 PM IST
  • ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது
  • சரியாக இரவு 1 மணிக்கு சிவராம் உறங்கிக்கொண்டிருந்த அறையிலிருந்து டமார் என்று காதை கிழிக்கும் அளவிற்கு சத்தம் கேட்டுள்ளது.
செல்போனால் பறிபோன கல்லூரி மாணவன் உயிர்! title=

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் அருகே செல்போன் வெடித்து கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த காலம் ஸ்மார்ட்போன் காலமாக மாறிவிட்டது, ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாம் செல்போன் குறித்து அதிகம் கேட்கப்படும் செய்தி என்னவென்றால் அது செல்போன் வெடிப்பு தான்.  இப்போது செல்போன் வெடிப்பினால் பல உயிர்கள் பறி போய் உள்ளது.

செல்போன் பேசிக்கொண்டிருந்த பொழுது திடீரென வெடித்து சிதறியது,சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும்போது வெடித்து சிதறியது,சார்ஜரில் போட்டுக்கொண்டே செல்போன் பேசியபோது ஏற்பட்ட விபத்து என்று பல செய்திகளை கேட்டுள்ளோம்.இதுபோன்ற ஒரு சம்பவம் தான் இங்கு அரங்கேறியுள்ளது.

ALSO READ தளபதி மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் ஒன் அண்ட் ஒன்லி ‘தல’ தோனி!

கோயம்புத்தூரை அடுத்த மதுக்கரை அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் மயில்சாமி (57).இவர் ஒரு கூலி தொழிலாளி.இந்த தொழிலாளியின் மகன் தான் சிவராம் (18). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் B.Sc படித்து வருகிறார்.  கடந்த 10-ம் தேதியன்று இரவு நேரத்தில்  வழக்கம்போல சிவராம் அவரது வீட்டில் தனக்கென ஒதுக்கப்பட்ட தனி படுக்கையறையில் படுத்துக்கொண்டு செல்போன் பயன்படுத்தியுள்ளார்.செல்போன் பயன்படுத்தி முடித்த சில மணி நேரத்திற்கு பின்னர் சார்ஜரில் செல்போனை பொருத்திவிட்டு உறங்கிவிட்டார்.

சரியாக இரவு 1 மணிக்கு சிவராம் உறங்கிக்கொண்டிருந்த அறையிலிருந்து டமார் என்று காதை கிழிக்கும் அளவிற்கு சத்தம் கேட்டுள்ளது. திடீரென கேட்ட இந்த சத்தத்தால் உறங்கி கொண்டிருந்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து திடுக்கிட்டு எழுந்தனர்.  அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சத்தம் கேட்ட தன் மகனின் அறைக்கு ஓடிச்சென்று பார்த்தனர்.அப்போது தான் செல்போன் வெடித்து சிதறியது தெரிந்தது.செல்போன் வெடித்ததால் ஏற்பட்ட தீயானது சிவராம் உறங்கி கொண்டிருந்த கட்டிலிலுள்ள மெத்தையின் மீது பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

 மெத்தையின் மீது பரவிய தீயானது உறங்கிக்கொண்டிருந்த சிவராமனின் மீது பரவி உடலில் பலத்த காயங்களை ஏற்படுத்தியது. மகனின் நிலையைக் கண்டு நிலைகுலைந்த பெற்றோர் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிவராமனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  ஆனால் இந்த தீ சிவராமனின் உடலில் பலத்த காயங்களை ஏற்படுத்தியதால் அவர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் மூழ்க செய்துள்ளது.

ALSO READ மதுரை மக்களின் தங்கரதை வைகை எக்ஸ்பிரஸ் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News