தருமபுரி ரயில் தடம் புரண்டு விபத்து! மழையா? சதியா? போலீசார் விசாரணை!

கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விரைவு ரயில் சேலம்-தருமபுரி இடையே அதிகாலை தண்டவாளத்தின் அருகே இருந்த கற்களில் உரசி தடம் புரண்டது-சுமார் மூன்று மணி நேரமாக பயணிகளுடன் நிறுத்தி வைப்பு.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 12, 2021, 09:44 AM IST
தருமபுரி ரயில் தடம் புரண்டு விபத்து! மழையா? சதியா? போலீசார் விசாரணை! title=

கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விரைவு ரயில் சேலம்-தருமபுரி இடையே அதிகாலை தண்டவாளத்தின் அருகே இருந்த கற்களில் உரசி தடம் புரண்டது-சுமார் மூன்று மணி நேரமாக பயணிகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து கோயம்புத்தூர், சேலம், தருமபுரி வழியாக கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் வரை தினசரி கண்ணூர் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கண்ணூர் விரைவு வண்டி மாலை 6 மணிக்கு கண்ணூரிலிருந்து புறப்பட்டு,  அதிகாலை 3.30 மணிக்கு தருமபுரி ரயில் நிலையத்திற்கு வரும். இந்நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து தருமபுரி நோக்கி வரும் வழியில் 45 கிலோ மீட்டரில் வே.முத்தம்பட்டி வனப்பகுதியில்  வனப்பகுதியில் ரயில் தண்டவாளத்தின் அருகில் பாதுகாப்பு சுவரில் கற்கள் சரிந்து கிடந்துள்ளது. இந்தக் கற்களில் ரயில் இன்ஜின் உரசியதில் எஞ்சின் மற்றும் அடுத்த இரண்டு பெட்டிகள் தடம்புரண்டுள்ளது.

train

மேலும் வனப் பகுதி என்பதால், இந்த பகுதிகளில் வரும் ரயில்கள் மெதுவாகவே வருவதால், இன்று பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தடம் புரண்டதால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது  சுமார் 4 மணி நேரமாக பயணிகளுடன் ரயில் வனப் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சேலம் மார்க்கத்தில் வேறு இன்ஜின் வரவழைக்கப்பட்டு, பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் பேருந்து மூலம் தருமபுரி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் ரயில்வே துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

train

இதனால் தற்போது சேலம் பெங்களூர் மார்க்கத்தில் சுமார் 4 மணி நேரமாக ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழையால் இந்த கற்கள் சரிந்து விழுந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் சதி வேலையா என்பது குறித்து ரயில்வே காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ மழை ஓய்ந்துவிடும்: வானிலை மைய அறிவிப்பால் மக்கள் நிம்மதி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News