நள்ளிரவில் மதுவிருந்து, போதையில் அத்துமீறல்: ஆண் நண்பர்களை செருப்பால் அடித்த பெண்

போதையில் இருந்த பெண் இன்ஜினியர் ஒரு கட்டத்தில் சுதாரித்துக்கொண்டு தனது ஆண் நண்பர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளும் வகையில் உதவி கேட்டு சத்தம் போட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 24, 2021, 06:05 PM IST
நள்ளிரவில் மதுவிருந்து, போதையில் அத்துமீறல்: ஆண் நண்பர்களை செருப்பால் அடித்த பெண் title=

சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் இன்று அதிகாலை கார் ஒன்று வேகமாக வந்தது. அப்போது காரில் இருந்த இளம் பெண் ஒருவர் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். கார் சிறிது தூரம் சென்று நின்றதும் காரில் இருந்து இறங்கி போதையில் இருந்த அந்த இளம் பெண் காரில் இருந்த  ஆண் நண்பர்களை 'இப்படி செய்வீயா...' என்று கூறியபடி தனது செருப்பால் அடித்து கொண்டிருந்தார். 

இதை பார்த்த அவ்வழியில் வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார் சாலையில் போதையில் தள்ளாடியபடி சண்டை போட்டுக்கொண்டிருந்த இளம்பெண்ணையும் அவரது 3 ஆண் நண்பர்களையும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

4 பேரிடமும் விசாரணை நடத்தியதில் அவர்கள் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தீபக்(27), சக்தி(28), கவுதம்(28) என்றும், இன்ஜினியர்களான இவர்கள் சென்னை துரைப்பாக்கத்தில் தங்கி ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. 3 பேரும் உடன் பணியாற்றும் இளம் பெண் இன்ஜினியரை நேற்று இரவு தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் மது விருந்துக்கு (Liquor Party) தங்களது காரில் அழைத்து வந்துள்ளனர். பிறகு 4 பேரும் அதிகளவில் மது குடித்துவிட்டு நடக்க முடியாத அளவில் தங்களது காரில் சென்றுள்ளனர். 

ALSO READ:உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றிய காதலன் வீட்டின் முன் காதலி தர்ணா போராட்டம்..!! 

அப்போது காரில் உடன் வந்த பெண் இன்ஜினியரை பாலியல் ரீதியாக ஆண் நண்பர்கள் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. போதையில் இருந்த பெண் இன்ஜினியர் ஒரு கட்டத்தில் சுதாரித்துக்கொண்டு தனது ஆண் நண்பர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளும் வகையில் உதவி கேட்டு சத்தம் போட்டது தெரியவந்தது. அப்போது சக ஆண் நண்பர்கள் தாங்கள் செய்த தவறுக்கு தங்களது தோழியிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். 

ஆனால் அவர் மன்னிக்க முடியாது என்று கூறி செருப்பால் அடித்துள்ளார். காரில் வந்த இளம் பெண் உட்பட 4 பேரும் அதிகளவில் போதையில் இருந்ததால் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இளம் பெண்ணின் ஆடைகள் கலைந்தும், சற்று கிழிந்தும் இருந்ததால் அப்பெண்ணிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்த சென்னை (Chennai) நுங்கம்பாக்கம் போலீசார் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

அதைதொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் இளம் பெண்ணை 3 பேரும் சேர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இளம் பெண் மற்றும் 3 ஆண் நண்பர்களின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு (Police Station) அழைத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு போதை தெளிந்தால் தான் என்ன நடந்தது என்று முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது. 

ALSO READ:Harassment: பாலியல் தொல்லை தொடர்பாக தலைமை ஆசிரியை & ஆசிரியர் கைது 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News