கஜா புயல் நிவாரண பணி: நாகையில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெறுவதால் நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை.....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2018, 07:02 PM IST
கஜா புயல் நிவாரண பணி: நாகையில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!  title=

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெறுவதால் நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை.....

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

உடனடி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.  எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், கஜா புயலால் பாதித்த மாவட்டங்களில் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டிருந்தது. இந்நிலையில், கஜா புயல் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது அம்மாவட்டங்களில் ஓரளவுக்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், மழை சில இடங்களில் பெய்து வருவதாலும் நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

 

Trending News