ஜீ தமிழ் நியூஸ் செய்தி எதிரொலி! காஞ்சிபுரத்தில் காவல்துறை பாதுகாப்பு பணி தீவிரம்

காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான  தாமல் ஏரி முழுவதுமாக நிரம்பி கலங்கள் வழியாக நீர் வெளியேறி வருகின்ற நிலையில் இது குறித்து ஜீ தமிழ் நியூஸ் செய்தி வெளியிட்டது. அதை பார்த்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 3, 2022, 02:06 PM IST
  • ஜீ நியூஸ் எதிரொலியால் நடவடிக்கை எடுத்த காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர்
  • காமல் ஏரி நீர் வெளியேற்றம்
  • அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர்
ஜீ தமிழ் நியூஸ் செய்தி எதிரொலி! காஞ்சிபுரத்தில் காவல்துறை பாதுகாப்பு பணி தீவிரம் title=

சென்னை: காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான  தாமல் ஏரி முழுவதுமாக நிரம்பி கலங்கள் வழியாக நீர் வெளியேறி வருகின்ற நிலையில் எவ்வித ஆபத்தையும் உணராமல் ஏரியின் கலங்கள் பகுதியில் சிறுவர்கள், இளைஞர்கள் ஆனந்த குளியலில் ஈடுபட்டு வந்ததையடுத்து  அசாம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்திட கோரி, ஜீ தமிழ் நியூஸ் செய்தி வெளியிட்டது. தற்போது, இச்செய்தியின் எதிரொலியாக  தாமல் ஏரியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, தாமல் ஏரியில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் குளிப்பது,மீன் பிடிப்பது போன்ற செயல்களை தடுக்கும் பொருட்டு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுப்பட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து இதுபோல் முழு கொள்ளளவை எட்டிய ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் பகுதிகளை காவல்துறை தொடர்ந்து  கண்காணித்து வருகின்றதாகவும், கிராமப்புறங்களிலுள்ள ஏரிகள், அந்தந்த கிராம நிர்வாகத்தின் மூலம் கண்காணிப்பதற்கு கிராம, ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், வி.ஏ.ஓ ஆகியோர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து ஏரிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழையொட்டி பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக, தமிழகத்தில் ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 909ஏரிகளில் 39 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

மேலும் படிக்க | மதுபோதையால் விபத்து - அரசு பேருந்தின் மீது மோதிய ஷேர் ஆட்டோ... சிகிச்சையில் ஓட்டுநர்

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான,1,500 ஏக்கர் பரப்பளவுகளை கொண்ட தாமல் ஏரியானது,தொடர் கன மழையின் காரணமாக  முழு கொள்ளளவான 18அடியும் முழுவதுமாக நிரம்பி ஏரியின் கலங்கள் வழியாக உபரி நீரானது தொடர்ந்து வெளியேறி வருகிறது.

இந்த தாமல் ஏரியின் கலங்கள் பகுதியில் ஆர்பரித்துக்கொண்டு வெளியேறி வரும் உபரி நீரையும் பொருட்படுத்தாமல், எவ்வித ஆபத்தையும் உணராமல் சிறுவர்கள், இளைஞர்கள் உற்சாகத்துடன் ஆனந்த குளியல் போட்டு குத்தாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏதேனும் அசாம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, தடையை மீறி குளித்து வருபவர்களை  அப்புறப்படுத்தி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நமது ஜீ தமிழ் நீயூஸ்-யில் செய்தி வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க | சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பற்றிய விபத்து! தாம்பரத்தில் பரபரப்பு

இந்நிலையில் இச்செய்தியின் எதிரொலியாக இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி தாமல் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது ஏரியிலுள்ள நீர் இருப்பு, வெளியேற்றம் என்பன குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி கூறுகையில், வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கன மழையினால் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஏரிகள் நிரம்பி வருகிறது,மாவட்டத்தில் தென்னேரி ஏரி,உத்திரமேரூர் பெரிய ஏரி,தாமல் என மூன்று மிகப்பெரிய ஏரிகள் உள்ளன,இதில் மூன்றாவதாக உள்ள தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீரானது கலங்கள் வழியாக வெளியேறி வருகின்றது,பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

பொது மக்கள் குளிப்பதற்கும், மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து உள்ளாட்சி நிர்வாகம் மூலமாக இளைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாகவும், மேலும் கிராமப்புறங்களிலுள்ள ஏரிகள், அந்தந்த கிராம நிர்வாகத்தின் மூலம் கண்காணிப்பதற்கு கிராம,ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், வி.ஏ.ஓ ஆகியோர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து ஏரிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது தாமல் ஏரியில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் குளிப்பது, மீன் பிடிப்பது போன்ற செயல்களை  தடுக்கும் பொருட்டு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

டர்ந்து இதுபோல் முழு கொள்ளளவை எட்டிய ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் பகுதிகள் குறித்தான தகவல்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் உடனுக்குடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பகுதியை காவல்துறையினர்  கண்காணித்து வருகின்றனர் என  தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் இவ் ஆய்வின் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள்,வருவாய்த்துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க | Bad Debts: வங்கிகளின் வாராக்கடன் 60000 கோடி ரூபாயா? செபியின் அதிர்ச்சி அறிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News