ஆர்.கே.நகர் பிரசாரத்தில், களமிறங்கிய பன்னீர்!

சென்னையில் ஓ பன்னீர்செல்வம் தற்போது, ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.    

Last Updated : Dec 8, 2017, 04:30 PM IST
ஆர்.கே.நகர் பிரசாரத்தில், களமிறங்கிய பன்னீர்! title=

சென்னை; முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.

இப்போது மீண்டும் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகின்றனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டன.

இந்நிலையில் தற்போது,  அ.தி.மு.க உறுப்பினர் மதுசூதனனை, ஆதரித்து தமிழ்நாடு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending News