தஞ்சை விமானப்படை தளத்தில் சுகோய் 30 MKI ரக போர் விமானம் இணைப்பு!

தஞ்சையில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் சுகோய் 30 MKI ரக 6 போர் விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளது!! 

Last Updated : Jan 20, 2020, 02:32 PM IST
தஞ்சை விமானப்படை தளத்தில் சுகோய் 30 MKI ரக போர் விமானம் இணைப்பு!  title=

தஞ்சையில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் சுகோய் 30 MKI ரக 6 போர் விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளது!! 

தஞ்சை: பிரம்மோஸ் விமானம் ஏவப்பட்ட சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணைகளுடன் ஆயுதம் ஏந்திய சுகோய் சு -30 MKI போர் விமானம் இந்திய விமானப்படையின் 222 டைகர்ஷார்க்ஸ் படைக்குள் திங்கள்கிழமை (ஜனவரி 20, 2020) தமிழ்நாட்டின் தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தில் சேர்க்கப்பட்டது. தஞ்சாவூரில் தூண்டல் விழாவில் சுகோய் சு -30 MKI போராளிக்கு நீர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்திய பெருங்கடலில் சீன போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டங்கள் அண்மை காலமாக அதிகரித்து வருகின்றன. அந்தமான் கடல்பகுதியில் அண்மையில் ஊடுருவிய சீன கப்பலை இந்திய கடற்படை கண்டுபிடித்து விரட்டியடித்தது. இதுபோல நடைபெறும் எதிரி நாடுகளின் அத்துமீறல்களுக்கு பதிலடி தரவும், இந்திய பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் வலிமையை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், தஞ்சாவூரில் புதுக்கோட்டை சாலையில் 1940 ஆம் ஆண்டு வெள்ளையர்களால் கட்டப்பட்டு, பிறகு பயன்படுத்தப்படாமல் இருந்த விமானப்படை தளத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தி சீரமைத்தது. அந்த தளத்தில் 4 ஆம் தலைமுறை போர் விமானமான சுகோய் 30 ரகத்தை சேர்ந்த 6 போர் விமானங்கள் இணைக்கப்பட்டன. இதையொட்டி இருமருங்கிலும் நீர் பீய்ச்சி அடிக்கப்பட அதனுள் சுகோய் விமானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. 

சுகோய் 30 MKI ரக போர் விமானம் தஞ்சை படை தளத்தில் இணைக்கப்பட்டதன் மூலம் இந்த வகை போர் விமானம் உள்ள தென்னிந்தியாவின் முதல் படைதளம் என்ற பெருமையை தஞ்சை பெற்றுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 2,120 கிமீ மற்றும் இதன் அதிகபட்ச எடை தாங்கும் திறன் 38,000 கிலோவாக உள்ளது. இவற்றில் ராடார் முதல் ராக்கெட்கள் வரை எடுத்துச் செல்ல முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும். 

 

Trending News