Tamil Nadu Budget 2022 Live: பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மூலம் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 18, 2022, 12:50 PM IST
Live Blog

கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் கடந்த வருடம் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்தார். 

இந்நிலையில் இந்த நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இன்று பட்ஜெட் ஜார்ஜ் கோட்டையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த முறையும் பேப்பர் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

18 March, 2022

  • 13:15 PM

    ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் நலன்

    ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் குறித்த பல முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட் உரையில் வெளியிடப்பட்டன.

    - தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு (TANSIM) 30 கோடி ரூபாய் நிதியாக வழங்கப்படும்.

    - ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 1,963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு 4,281.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

     

    ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் குறித்து பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முழுமையான தகவல்களை குறித்து இங்கே காணலாம். 

     

  • 12:00 PM

    நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல்

  • 11:45 AM

    பட்ஜெட் உரையை 1 மணி நேரம் 50 நிமிடங்கள் வாசித்து நிறைவு செய்தார் நிதியமைச்சர்

  • 11:45 AM

    கடந்த அரசு விட்டு சென்ற நெருக்கடியான நிதிநிலை காரணமாக இந்த ஆண்டே அதனை செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

  • 11:45 AM

    மகளிருக்கான உரிமைத் தொகை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

  • 11:45 AM

    வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி 

  • 11:45 AM

    அரசு பள்ளிகள் நவீனப்படுத்தப்படும் என அறிவிப்பு

  • 11:45 AM

    ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வகங்களுடன் ரூ.7,000 கோடியில் பள்ளிகள் நவீனப்படுத்தப்படும் 

     

  • 11:45 AM

    தமிழக பட்ஜெட் உலகளவில் சென்றடைய வசதியாக சில பத்திகளை ஆங்கிலத்தில் வாசித்தார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

    உலகளவில் தொழில்களை ஈர்க்க இது உதவும் என விளக்கம் அளித்தார்.

  • 11:30 AM

    வருமாண்டில் இதுவரை இல்லாத அளவு ஊழல் தடுப்பு பணிகளை இந்த அரசு மேற்கொள்ளும்.

  • 11:30 AM

    மனித வள சீர்திருத்த குழு அமைக்கப்படும்

  • 11:30 AM

    அரசு சொத்துகளை முறையாக கணக்கிட்டு அவற்றை சேகரித்து கண்காணிக்க சொத்து மேளாண்மை மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும்.

  • 11:30 AM

    327 முன்கள பணியாளர்களுக்கு 79.50 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

  • 11:30 AM

    1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்து தரம் உயர்த்தப்படும். இவற்றிற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

  • 11:30 AM

    தமிழ்நாடு பண்பாடு, தொன்மை மேம்படுத்த தொகுப்பு சுற்றுலா பயணம் மேம்படுத்தப்படும்.

  • 11:30 AM

    பிளாக்-செயின் போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை அரசு நன்கு அறிந்துள்ளது. இதனை மேம்படுத்த 190 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

  • 11:30 AM

    மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்

  • 11:30 AM

    தோல் அல்லாத காலணிகள் தோல் சார்ந்த வேலைவாய்ப்பை உருவாகின்றன தொடைகளை மேலும் வளர்க்கும் வண்ணம் புதிய காலனி தொழில் கொள்கை வெளியிடப்படும்

  • 11:30 AM

    தமிழ்நாடு கயிறு தொழில் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது, 

    உள்நாட்டு , வெளிநாட்டு ஏற்றுமதியில் மதிப்பீட்டு பொருட்களை பிரபலப்படுத்த கோவையில் 5கோடி செலவில் மையம் அமைக்கப்படும்

  • 11:15 AM

    கடந்த ஆண்டு மின்சாரத்துறை சந்தித்த 13,300 கோடி ரூபாய் இழப்பை தமிழக அரசே ஏற்கும்...

  • 11:15 AM

    மகளிருக்கு இலவச பயணத்திட்டத்தால் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 61 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்காக 1560 கோடி ரூபாய் ஒதுக்கீடு..

  • 11:15 AM

    பிரதமர் மாதிரி வீட்டு வாரிய திட்டத்திற்கு 3200 கோடி ஒதுக்கீடு

  • 11:15 AM

    நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 1000 கோடி ஒதுக்கீடு

    சிங்கார சென்னை திட்டத்திற்கு 500 கோடி ஒதுக்கீடு

  • 11:15 AM

    நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 1000 கோடி ஒதுக்கீடு

     

  • 11:15 AM

    சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • 11:15 AM

    புதிய உருவாக்கப்பட்ட28  நகராட்சிகளுக்கு தலா 2கோடி வீதம் 56 கோடி ஒதுக்கீடு

  • 11:15 AM

    நகர்புறத்தை பசுமைப்படுத்த 500 பூங்காக்கள் உருவாக்கப்படும்

  • 11:15 AM

    தாம்பரம், கும்பகோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாநகராட்சிகளை மேம்படுத்த தலா 10 கோடி என 60 கோடி ஒதுக்கீடு

  • 11:15 AM

    பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்தூ முப்பதாயிரம் புதிய வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது நான்கி ஆயிரத்து 830 கோடி ஒதுக்கீடு

  • 11:15 AM

    ஊரக வள்ர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறைக்கு 26.647.19 கோடி ஒதுக்கீடு

  • 11:00 AM

    பராமரிப்பு இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட 149 சமத்துவபுரங்கள் 190 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்

  • 11:00 AM

    தேவாலயம், தர்காக்களை சீரமைக்க சிறுபான்மை நலத்துறைக்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • 11:00 AM

    பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் சமூக பொருளாதார முன்னேற்ற முன்னேற்றம் அடைய மனம் வாழ்வாதார திட்டங்களை ஆய்வு செய்து மாறிவரும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறு மறு சீரமைக்கப்படும்

  • 11:00 AM

    மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்க 1062 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • 11:00 AM
  • 11:00 AM

    6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

  • 11:00 AM

    அரசுப் பள்ளியில் படிக்கும் பெண்கள் இடைநிற்றல் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

     

  • 11:00 AM

    உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டு மருத்துவக் கல்வியை தொடர முடியாமல் தாயகம் திரும்பியுள்ள மாணவர்கள் மருத்துவக் கல்வியை தொடர அனைத்து உதவிகளையும் இந்த அரசு வழங்கும்

  • 10:45 AM

    150 ஆண்டுகளை சேர்ந்த 2000 சதுரங்க விளையாட்டு வீரர்கள் சென்னை சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இது தமிழக விளையாட்டுத்துறையில் திருப்புமுனையாக அமையும்.

  • 10:45 AM

    வடசென்னையில் இளைஞர்களின் திறனை ஊக்குவிக்க விளையாட்டு வளாகம் உருவாக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் ராதாகிருஷ்ணன் நகரில் அமைக்கப்படுகிறது

  • 10:45 AM

    இந்திய தொழில் நுட்ப கழகம், மருத்துவ கல்வி இயக்கம் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க 6 முதல் 12 மாணவர்களுக்கான செலவை அரசே ஏற்கும்

  • 10:45 AM

    தமிழ்நாடு ஒலிம்பிக் தேடல் திட்டத்திற்கு ₹25 கோடி ஒதுக்கீடு

  • 10:45 AM

    இந்திய தொழில் நுட்ப கழகம், மருத்துவ கல்வி இயக்கம் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க 6 முதல் 12 மாணவர்களுக்கான செலவை அரசே ஏற்கும்

  • 10:45 AM

    ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர் ஊக்குவிக்க நான் முதல்வன் திட்டம்

  • 10:45 AM

    பள்ளிகல்வி துறைக்கு தமிழக பட்ஜெட்டில் 36,895.89 கோடி ஒதுக்கீடு

  • 10:45 AM

    அறிவுசார் நகரம் உருவாக்கப்படுகிறது. உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழக கிளைகளை கொண்டிருக்கும். இந்த நகரில் ஆராய்ச்சிப் பூங்காக்கள் ஏற்படுத்தப்படும்

  • 10:45 AM

    சென்னை போல அனைத்து மாவட்டங்களிலும் புத்தக காட்சி நடத்தப்படும். ஆண்டுக்கு 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும்.

  • 10:45 AM

    புத்தக வாசிப்பு மக்கள் இயக்கமாக மாற்ற புத்தக வாசிப்பு திருவிழா நடத்தப்படும்

  • 10:45 AM

    அரசு பள்ளிகளை மேம்ப்படுத்துவதற்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் கல்வி மேம்பாட்டு திட்டம் தொடங்கப்படும்

  • 10:45 AM

    அனைத்து அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தை அரசு செயல்படுத்தும். அரசுப் பள்ளிகளில் 18000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். ஸ்மார்ட் கிளாஸ்ரூம், கண்ணி வசதி ஆகியவை அடுத்த 5 ஆண்டுகளில் 7000 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

Trending News