சென்னை மாணவி படுகொலை! காரணம் இதுதான்!

சென்னை கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரி வாசலில் மாணவியை இளைஞர் ஒருவன் கத்தியால் குத்தி படுகொலை செய்து உள்ளான். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டு உள்ளது.

Last Updated : Mar 9, 2018, 08:06 PM IST
சென்னை மாணவி படுகொலை! காரணம் இதுதான்! title=

சென்னை கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரி வாசலில் மாணவியை இளைஞர் ஒருவன் கத்தியால் குத்தி படுகொலை செய்து உள்ளான். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டு உள்ளது.

 

 

சென்னை கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரியில் பி.காம். படித்து வரும் மாணவி அஷ்வினி. இந்நிலையில் கல்லூரி வாசலில் மாணவி அஷ்வினியை இளைஞர் ஒருவன் கத்தியால் குத்தியிருக்கிறார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவி அஷ்வினியை பொதுமக்கள் மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அஷ்வினி பரிதாபமாக மரணமைதார்.

இதனிடைய அஷ்வினியை கத்தியால் குத்திய இளைஞனை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கத்தியால் குத்திய வாலிபரையும் பொதுமக்கள் கடுமையாக தாக்கியதால் இளைஞனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞரின் பெயா் அழகேசன் என்பதும் மதுரவாயல் பகுதியைச் சோ்ந்தவன் என்றும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே அஷ்வினிக்கு அழகேசன் பலமுறை காதல் செய்யுமாறு தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த இளைஞன் மீது மாணவி அஷ்வினி ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாகதான் இச்சம்பவம் நடைபெற்றிருப்பதுமாக கூறப்படுகிறது.

Trending News