நெல்லை : அரசுப் பள்ளி மாணவர் பலி - 3 மாணவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த 12ஆம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 30, 2022, 02:21 PM IST
  • அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடையே கடும் மோதல்
  • கல்லால் தாக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி பலி
  • 3 மாணவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு
நெல்லை : அரசுப் பள்ளி மாணவர் பலி - 3 மாணவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு  title=

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் மாணவர் செல்வசூர்யா. இவர் பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 25-ந் தேதி செல்வசூர்யாவுக்கும் அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவருக்கும் இடையே கையில் சமுதாய கயிறு கட்டுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது செல்வ சூர்யாவுக்கு ஆதரவாக இரண்டு மாணவர்களும், பிளஸ் 1 மாணவருக்கு ஆதரவாக அதே வகுப்பில் படிக்கும் 2 மாணவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. வாய்சண்டை கைகலப்பாக மாற, ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் ஒரு தரப்பு மாணவர்கள் செல்வசூர்யாவை கல்லால் பலமாக தாக்கியுள்ளனர். அதில், காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சுயநினைவை இழந்த மாணவர் செல்வசூர்யா அங்கேயே சுருண்டு விழுந்தார்.

நெல்லை மாணவர் பலி

உடனே அங்கிருந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை விழக்கி விட்டு சமாதானம் செய்துவைக்க முற்பட்டனர். மேலும் சம்பவம் குறித்து பாப்பாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்து, பள்ளிக்கு விரைந்து சென்ற காவலர்கள், இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதன் பின்னர் வீட்டிற்கு வந்த செல்வசூர்யாவிற்கு இரவில் கடுமையான தலையில் வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்தவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கல்லால் தாக்கப்பட்டதில் செல்வசூர்யாவின் உடல்நிலை மோசமான நிலைக்கு சென்றது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை மாணவர் செல்வசூர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை மாணவர் பலி

மேலும் படிக்க | கோவை: ரூ.50 கடன் வழங்க மறுத்த உறவினருக்கு கத்திக்குத்து!

முதற்கட்ட இந்த வழக்கு தொடர்பாக 3 மாணவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நெல்லையில் பதட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பாப்பாக்குடி மற்றும் பள்ளக்கால் புதுக்குடி பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களிடையே தொடர்ந்துவரும் இந்த மோதல் போக்கு கல்வியாளர்களிடையே தற்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலன் மனைவிக்கு கத்திக்குத்து: காதல் கணவர் ராகேஷ் வெறிச்செயல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News