தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை: ஆர்பிஐ

தமிழகத்தில் அனைத்து வங்கிகளும் விடுமுறை இல்லாமல் செயல்படும் என ரிசர்வ் வங்கியின் தென் மண்டல மேலாளர் சதக்கத்துல்லா அறிவித்துள்ளார்.

Last Updated : Nov 12, 2016, 04:16 PM IST
தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை: ஆர்பிஐ title=

சென்னை: தமிழகத்தில் அனைத்து வங்கிகளும் விடுமுறை இல்லாமல் செயல்படும் என ரிசர்வ் வங்கியின் தென் மண்டல மேலாளர் சதக்கத்துல்லா அறிவித்துள்ளார்.

ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000  நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை அடுத்த மாதம் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், தபால் நிலையங்கள் மூலம் நேற்று ரூ.2000 புதிய நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளது. இன்று மூன்றாவது நாளாக வங்கிகளுக்கு மக்கள் படையெடுத்தனர். ஒரு நாளைக்கு 4000 ரூபாய் அளவுக்கு மட்டுமே மாற்ற முடியும் என்று கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதால் இன்றும் வங்கிகளில் கூட்டம் காணப்பட்டது. இது தவிர வங்கிகளில் நிறைய பேர் ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகளை கொண்டு வந்து டெபாசிட் செய்தனர். மேலும் நேற்று முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் 72 மணி நேரம் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்தன.

இந்த நிலையில், மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வரை விடுமுறையின்று தமிழகத்தில் வங்கிகள் தொடர்ந்து செயல்படும் என்று ரிசர்வ் வங்கியின் மண்டல மேலாளர் சதக்கதுல்லா தெரிவித்துள்ளார்.

Trending News