)
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சுற்றுலா வாகனங்கள் ஒரு வழிப் பாதையாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வாகன ஒட்டுனர்கள் காலவரையற்ற பேராட்டம் நடத்தி வருகின்றனர். குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் 100 க்கு மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் உள்ளன. கோடை சீசன் காலங்களில் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை சனி, ஞாயிறு மட்டும் ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தி வந்தனர். தற்போது இந்த தேசிய நெடுஞ்சாலையை கோடை சீசன் முடியும் வரை ஒரு வழிப் பாதையாக மாற்றியதால் பல்வேறு தரப்பினர் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா வாகன ஒட்டுனர்கள் நாங்கள் மேட்டுப்பாளையம் மற்றும் சமவெளிப் பகுதிக்கு செல்ல குன்னுாரில் இருந்து கோத்தகிரி 24 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது, கோடை சீசனை நம்பி வாழ்ந்து வருகிறோம்.

நேர விரையம், பெட்ரோல், டீசல், உயர்வு காரணமாக பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. ஒரு வழிப் பாதையாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வாகன ஒட்டுனர்கள் வாகனங்களை திருப்பி நிறுத்தி காலவரையற்ற பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதுவரை நடைமுறையில் உள்ளது போல் குன்னுாரில் உள்ள சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் தோட்டக்கலை பணியாளர்கள், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் படகு சவாரி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் மலை ரயில் பயணம் செய்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதால் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்த மலை ரயில் பாதை அடர் வனப்பகுதியிலும் மலை குகைகளிலும் அமைந்துள்ள நிலையில் இந்த ரயிலில் பயணம் செய்து அடர் வனம், காட்டாறு, மலை குகைகள், அதில் வாழும் வன உயிரினங்கள் என இயற்கை அழகினை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணித்து வருகின்றனர். தற்போது கோடை வெயில் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்து வருகிறது. இதனை சமாளிக்க முடியாமல் பலரும் திணறி வருகின்றனர். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பலரும் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருக்க இந்த பிரச்சனைகளை உடனே சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ