கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க குடியரசு தலைவர் வருகை!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நாளை மறுநாள் சென்னை வருகிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்!!

Last Updated : Aug 3, 2018, 11:42 AM IST
கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க குடியரசு தலைவர் வருகை! title=

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நாளை மறுநாள் சென்னை வருகிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்!!

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், மலேசியா சட்டமன்ற உறுப்பினர், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர், தமிழ் திரையுலக நடிகர்கள், கேரளா முதல்வர் பினராயி விஜயன் என பலரும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து கேட்றிந்தனர்.

இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவிரி மருத்துவமனைக்கு நாளை மறுநாள் (ஆகஸ்ட் 5 ஆம் தேதி) சென்னை வருகிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். இதை தொடர்ந்து மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

 

Trending News