கத்திப்பாராவில் போராட்டம்: இயக்குநர் கவுதமன் கைது!!

Last Updated : Apr 13, 2017, 10:37 AM IST
கத்திப்பாராவில் போராட்டம்: இயக்குநர் கவுதமன் கைது!! title=

டெல்லியில் கடந்த சில நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாரா பாலத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

கத்திப்பாரா மேம்பாலத்தில், விவசாயிகள், மீனவர் பிரச்னை தொடர்பாக இயக்குநர் கவுதமன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிட மறுத்ததால், இயக்குநர் கவுதமன் மற்றும் இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

இயக்குநர் கவுதமன் தலைமையிலான இந்த போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அலுவலகம், கல்லூரி, பள்ளி செல்லும் நேரம் என்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் கவுதமன் தலைமையிலான போராட்டக் குழுவினர் கத்திப்பாரா மேம்பாலத்தில் சாலையை மறித்து சங்கிலியை போட்டு பூட்டி வைத்துவிட்டனர். இந்த மறியல் போராட்டத்தை தடுக்க காவல்துறை முயற்சி செய்து வருகிறது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். 

Trending News