அதிமுகவிலிருந்து புதுச்சேரி கண்ணன் விலகினார்

Last Updated : Feb 6, 2017, 09:05 AM IST
அதிமுகவிலிருந்து புதுச்சேரி கண்ணன் விலகினார்  title=

அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த புதுச்சேரி அதிமுக தேர்தல் குழு தலைவர் கண்ணன் கட்சியிலிருந்து விலகினார். 

புதுவை முன்னாள் அமைச்சரான கண்ணன் காங்கிரஸ் கட்சி சார்பில் மேல்சபை எம்.பி.யாக (2009-2015) இருந்துள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தார். 

இந்நிலையில் கட்சி தொடர்பான செயல்பாடுகளில் அவர் ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தார். சமீபத்தில் நடந்த நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலின் போதும் அவர் தேர்தல் பணியாற்றாமல் ஒதுங்கியே இருந்து வந்தார். 

இதற்கிடையே தமிழகத்தில் அதிமுக-வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் அதிமுக-வில் இருந்து விலகுவதாக கண்ணன் நேற்று தெரிவித்தார். இதையொட்டி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது:-

அதிமுக-வை விட்டு நான் வெளியேறுவது அனைவருக்கும் தெரிந்த வெளிப்படையான விஷயம்தான். இதுதொடர்பாக நான் மேற்கொண்டு எதுவும் சொல்வதற்கில்லை என்றார். 

Trending News