8ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Last Updated : Jan 29, 2020, 09:24 AM IST
8ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு title=

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் மாநில பாடதிட்டத்தின் கீழ் செயல்படும் அரசு (govt) மற்றும் அரசு உதவி (govt aided) பெறும் பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது.

இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தெரிவித்து வந்த நிலையில் நேற்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்த ஆண்டு நிச்சயமாக 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் அடுத்த ஆண்டு தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாதிரி வினாத்தாள் தயாரித்து தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News