தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது - சட்டத்தை திருத்தியது தமிழக அரசு

தமிழில் தேர்ச்சி பெறாமல் தமிழக அரசுப் பணிகளில் அமர முடியாத வகையில் சட்டத்தை தமிழக அரசு திருத்தியுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 13, 2023, 12:23 PM IST
  • தமிழக அரசு பணிகளில் கொண்டு வந்த தமிழக அரசு முக்கிய திருத்தம்
  • தமிழில் போதிய அறிவில்லை என்றால் அரசு பணிகளில் இருக்க முடியாது
  • சட்டப்பேரவையில் சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்தார் பிடிஆர்
தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது - சட்டத்தை திருத்தியது தமிழக அரசு title=

தமிழக அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்கள் அமர்த்தப்படுவதாக புகார்கள் எழுந்து கொண்டிருக்கிறது. இதை தடுக்கும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. குறிப்பாக அதிமுக ஆட்சியில் அனைத்து மாநிலத்தவர்களுக்கும் டிஎன்பிஎஸ்சி எழுதும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றதும் தமிழ் மொழி தேர்வை கட்டாயமாக்கியது.

மேலும் படிக்க | Pongal 2023: காணும் பொங்கலுக்கு தயாராகி வரும் வண்டலூர் உயிரியல் பூங்கா

அதற்கேற்ப, 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும், பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் எனும் வகையில் சட்டம் திருத்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும், மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் மொழியில் தேர்ச்சி பெறும் இளைஞர்களை நூறு விழுக்காடு ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2021 கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக இந்த சட்ட மசோதாவை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

மேலும் படிக்க | Jallikattu 2023: ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள், காத்திருக்கும் தமிழ்நாடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News