நீட் தேர்வில் அதிகளவில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி!!

Last Updated : Feb 3, 2019, 07:13 PM IST
நீட் தேர்வில் அதிகளவில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி!!  title=
நீட் தேர்வில் நாட்டிலேயே தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
 
மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு ”நீட் தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு இளங்கலை மற்றும் முதுகலை என தனித்தனியே நடத்தப்பட்டு வருகிறது.
 
கடந்த ஜனவரி 6ம் தேதி 2019-20 கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் சென்னை, கோவை உள்ளிட்ட, நகரங்களில் நடைபெற்றது. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் எழுதினர். தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 31ம் தேதி வெளியானது.
 
இதில் தமிழகத்தில் இருந்து 17 ஆயிரத்து 67 பேர் தேர்வு எழுதிய நிலையில், 11 ஆயிரத்து 121 பேர் தேர்வாகி உள்ளனர். வெற்றிபெற்றவர்களில் 7 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Trending News