திருச்சியில் 1.8 கோடி மதிப்பில் ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகம்...

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (29.1.2020) தலைமைச் செயலகத்தில், உள் (போக்குவரத்து) துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

Last Updated : Jan 29, 2020, 10:14 PM IST
திருச்சியில் 1.8 கோடி மதிப்பில் ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகம்... title=

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (29.1.2020) தலைமைச் செயலகத்தில், உள் (போக்குவரத்து) துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கேற்ப போக்குவரத்துத் துறை அலுவலக செயலாக்கப் பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் நிறைவேற்றிடவும், பொதுமக்கள் சிரமமின்றி போக்குவரத்துத் துறை தொடர்பான அன்றாடப் பணிகளை அருகிலேயே உள்ள அலுவலகங்களில் மேற்கொள்ள ஏதுவாகவும், புதிய பகுதி அலுவலகங்களைத் தோற்றுவித்தல், பகுதி அலுவலகத்தினை வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாகத் தரம் உயர்த்துதல், தேவையான வசதிகளுடன் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு சீரிய திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், 2018-2019-ஆம் ஆண்டிற்கான உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் இயக்கூர்திகள் சட்டங்கள் மற்றும் நிருவாக மானியக் கோரிக்கையின்போது, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு (பகுதி அலுவலகம்) பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய சொந்தக் கட்டடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, திருச்சி (கிழக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க. சண்முகம், இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், இ.ஆ.ப, போக்குவரத்துத் துறை ஆணையர் தென்காசி சு. ஜவஹர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Trending News