நாளை முதல் தென்மேற்கு பருவமழை வலுவடையும்.. TN-ல் 19 மாவட்டங்களில் கனமழை..!

வரும் 4 ஆம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

Last Updated : Aug 2, 2020, 03:59 PM IST

Trending Photos

நாளை முதல் தென்மேற்கு பருவமழை வலுவடையும்.. TN-ல் 19 மாவட்டங்களில் கனமழை..! title=

வரும் 4 ஆம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

நாளை முதல் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வரும் 4 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன் காரணமாக நாளை முதல் தென் மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது.... தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், கடலூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என தெரிவித்துள்ளது. தஞ்சாவூர்  திருவாரூர்,  நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி  மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

ALSO READ | வானிலை முன்னறிவிப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த IMD திட்டமிட்டுள்ளது

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் எனவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் வரும் 6ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம்  அறிவுறுத்தியுள்ளது.

Trending News