வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை!

வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

Last Updated : Aug 2, 2018, 04:58 PM IST
வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை!  title=

வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பருவமழை வெளுத்து வாங்கிவருகிறது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரி கூறுகையில்.....!

சென்னையில் அதிகப்பட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்ததில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

 

Trending News