விரைவில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜு

அமைச்சர் கடம்பூர் ராஜூ (Kadambur Raju) தமிழகத்தில் திரையரங்குகள் விரைவில் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் எனத்தெரிகிறது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 21, 2020, 12:35 PM IST
  • தமிழகத்தில் திரையரங்குகள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக முதலமைச்சர் 28ம் தேதி ஆலோசனை.
  • 7 மாதங்களாக மூடப்பட்ட தியேட்டர்கள் அன்லாக் 5.0-ல் திறக்க அனுமதி
  • அடுத்த மாதம் முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் திறக்கலாம்.
விரைவில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜு title=

CHENNAI: அன்லாக் 5.0 (Unlock 5.0) உத்தரவில் நாட்டில் மீண்டும் சினிமா திரையரங்குகளை திறந்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பல மாநிலங்களில் திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். அதேபோல தமிழகத்தில் திரையரங்குகளை எப்பொழுது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்து வந்தது. அதுக்குறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ (Kadambur Raju) தமிழகத்தில் திரையரங்குகள் விரைவில் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) தலைமையில் வரும் 28 ஆம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை நிபுணர்கள் கலந்து ஆலோசித்து பிறகு, தியேட்டர்கள் திறப்பது, அடுத்த மாதம் ஊரடங்கு தளர்வு குறித்து அறிவிக்கப்படும்.

சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திரையரங்கு உரிமையாளர்கள் பேசினார்கள் குறிப்பிடத்தக்கது.

ALSO READ |  7 மாதத்திற்கு பின் திறக்கப்படும் சினிமா ஹால்... நிகழப்போகும் மாற்றங்கள் ஏன்னென்ன?

கொரோனா தொற்று (Coronavirus Pandemic) பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு விதி அமல் செய்யப்பட்டதால், நாட்டில் அனைத்து  திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. அடுத்த மாதம் முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் எனத்தெரிகிறது. 

கொரோனா தொற்று பாராவாலால் ஊரடங்கில் கிட்டத்தட்ட 7 மாதங்களாக மூடப்பட்ட தியேட்டர்கள் மற்றும் திரையரங்குகள் அன்லாக் 5.0-ல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அதாவது அக்டோபர் 15 முதல் நாடு முழுவதிலும் உள்ள  திரையரங்குகள் மீண்டும் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் புதிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்கள் திறக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

ALSO READ |  திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை - உச்சநீதிமன்றம்!

புதிய விதிகள் என்னென்ன? 

  1. வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் தளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.
  2. பெக் உணவு அல்லது பானங்களை எடுத்துக்கொள்வது ஏற்கத்தக்கது.
  3. டிக்கெட் கவுண்டரில் 3 பாதுகாப்பு கருவிகளும் இருக்கும், அவை 30, 40, மற்றும் 50 ரூபாய்.
  4. இந்த பாதுகாப்பு கருவியில் முகமூடி, கை சுத்திகரிப்பு, கை கையுறைகள் உள்ளன.
  5. சமூக தூரத்தை பராமரிப்பது அவசியம்.
  6. முகமூடிகள், கை சுத்திகரிப்பாளர்கள், வெப்பத் திரையிடல் ஆகியவற்றைப் பயன்படுத்துவது அவசியம்.
  7. மாற்று இருக்கை ஏற்பாடு அதாவது ஒரு இருக்கையை விட்டு வெளியேறுவதன் மூலம் இருக்கை ஏற்பாடு செய்யப்படும்
  8. ஏசி வெப்பநிலை ஆடிட்டோரியம் அல்லது சினிமா ஹாலில் 24 முதல் 30 டிகிரி வரை இருக்கும்
  9. வெப்பநிலை திரையில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் வாடிக்கையாளர் நுழைய அனுமதிக்கப்படமாட்டார் மற்றும் முழு டிக்கெட் பணமும் திருப்பித் தரப்படும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News