டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு அறிவிப்பு: 1,953 காலி பணியிடங்கள்

Last Updated : Apr 27, 2017, 12:36 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு அறிவிப்பு: 1,953 காலி பணியிடங்கள் title=

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று(27.04.2017) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முக தேர்வு இல்லாத டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 41 துறைகளில் 1953 காலிப்பணியிடங்களுக்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு இன்று(27.04.2017) முதல் மே 26-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விண்ணப்பப்படிவங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதள முகவரியான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

தனி எழுத்தர், பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மனை வரை தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

தேர்வுக்கட்டணத்தை மே 29-ம் தேதி வரை இணையதளம், தபால் அல்லது வங்கி அலுவலகங்கள் மூலம் செலுத்தலாம். 

Trending News