திருவாரூர் தேர்தல் குறித்து அனைத்துக்கட்சியினரின் கருத்தை கேட்க வேண்டும்: ஸ்டாலின்

திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து அனைத்துக்கட்சியினரின் கருத்துகளை மாவட்ட தேர்தல் அதிகாரி கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்...

Last Updated : Jan 5, 2019, 12:28 PM IST
திருவாரூர் தேர்தல் குறித்து அனைத்துக்கட்சியினரின் கருத்தை கேட்க வேண்டும்: ஸ்டாலின்  title=

திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து அனைத்துக்கட்சியினரின் கருத்துகளை மாவட்ட தேர்தல் அதிகாரி கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்...

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி காலியான திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக வேட்பாளருக்கு மதிமுக முழு ஆதரவு அளிக்கும் என வைகோ தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா? முடியாதா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக்கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

 

Trending News