வடிவேலு விற்ற கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்கும் நவீன மிஷின்... எங்கு, எவ்வளவு தெரியுமா?

Fake Currency Detector Device : கள்ள நோட்டுகளை  கண்டறிவதற்கு ஒரு மிஷின் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா, அதுவும் குறைந்த விலையில் எளிதாக வாங்கலாம் என்றால். அப்படிப்பட்ட அந்த சாதனம் குறித்து இங்கு காண்போம். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 5, 2023, 03:05 PM IST
  • வடிவேலு விற்ற கள்ள நோட்டு மிஷின் போன்றது என்றாலும் இது உண்மையாக வேலை செய்யக்கூடியது.
  • புற ஊதா கதிர்கள் மூலம் இந்த மிஷின் கள்ள நோட்டுகளை அடையாளம் காண்கிறது.
  • இதன் விலை மிகக்குறைவு, ஆனால் உங்களுக்கு மிகவும் பயனளிக்கத்தக்கது.
வடிவேலு விற்ற கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்கும் நவீன மிஷின்... எங்கு, எவ்வளவு தெரியுமா? title=

Fake Currency Detector Device : சரத்குமாரின் 'சத்ரபதி' படத்தில் வடிவேலு ஒவ்வொரு வியாபாரமாக செய்து வருவார். மூட்டை பூச்சிகளை கொல்லும் நவீன மிஷினில் இருந்து கள்ளநோட்டுகளை கண்டறியும் பொருள்வரை அத்தனை வியாபாரத்திலும் பயங்கர அடிவாங்கி தப்பிக்கும் வடிவேலுவின் அந்த காமெடி ட்ராக் மிகவும் பிரபலமானது. 

அதில், கள்ளநோட்டுகளை கண்டறியும் மிஷன் குறித்து வடிவேலு விளக்கம் கொடுக்கும்போது, 'நல்ல நோட்டு போட்டா பச்ச லைட்டு எரியும், கள்ள நோட்டு போட்டா ரெட் லைட் எரியும்' என வடிவேலு மாடிலேஷனோடு சொல்வார்.  அந்த மிஷினும் கேட்டு போலியானது என மக்கள் அவரை போட்டு அடிக்கும் போதெல்லாம், '..ச்சே அந்த மிஷின் உண்மையா இருந்தா எப்படி இருக்கும்-னு' உங்களுக்கு தோன்றுமா?. ஆம், அப்படி ஒரு மிஷின் உண்மையாகவே இருக்கிறது. அதுவும் உங்களால் எளிதாக வாங்கும் வகையில் இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் அதிக பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டிய வேலைகளை நீங்கள் மேற்கொண்டு வருகிறீர்கள் என்றால், பல முறை ஒன்று அல்லது இரண்டு கள்ள நோட்டுகளை அதில் கண்டெடுத்திருப்பீர்கள்.  அதிக அளவில் பணப்புழக்கம் இருக்கும் இடங்களில், ஆயிரம் நல்ல நோட்டுகளுக்கு இடையே இந்த கள்ள நோட்டுகள் புகுந்திட வாய்ப்புகள் அதிகம். எனவே,தான் இதனை எளிமையாக கண்டறிய  போலி நோட்டுகளை கண்டறியும் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ரூ 139 ரீசார்ஜ் பிளான்..டெய்லி 2ஜிபி டேட்டா..அசரவைக்கும் பிஎஸ்என்எல்

போலி நோட்டுகளை கண்டறியும் இந்த சாதனம் புற ஊதா ஒளிக்கதிர்களால் இயங்கக்கூடியது. இந்த சாதனம் அளவில் சிறியதுதான். இந்தச் சாதனத்தை எங்கு வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துச் சென்று மேஜையில் வைத்துப் பயன்படுத்தலாம். இந்த சாதனம் சற்று விலை குறைவுதான். ஆனால், உங்களை பெரிய இழப்புகளில் இருந்து தடுக்கும் ஆற்றல்மிக்கது. இந்த சாதனத்தில் எந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இங்கு காணலாம்.

இந்த சாதனத்தில் ஒரு புற ஊதா ஒளிக்கதிர்கள் பயன்படுத்தப்படுகிறது. அது ஒரு போலி நோட்டின் மீது விழுந்தவுடன், அந்த நோட்டின் உண்மைநிலை வெளியே தெரியும். கரன்சியின் மீது புற ஊதா ஒளிக்கதிர்கள் படும்போது அந்த நோட்டு பளபளக்க ஆரம்பிக்கும். அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை நீங்கள் எளிதாக கண்டறியலாம். உங்கள் சிறு வணிகத்திலும் அல்லது வேறு வேலைகளிலும் கள்ள நோட்டுகளை கண்டறிய விரும்பினால், இந்த கருவியை அமேசானில் இருந்து வெறும் ரூ.1499க்கு வாங்கலாம்.

மேலும் படிக்க | இனிமே உங்களுக்கு கரண்ட் பில் வராது... இந்த ஒரு சாதனம் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News