2 மணி நேரத்தில் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்... Swiggy அதிரடி...

கொரோனா வைரஸ் வெடிப்பிற்கு மத்தியில் இந்தியாவின் 125-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஸ்விக்கி புதிய மளிகை விநியோக சேவையைத் தொடங்கியுள்ளது.

Last Updated : Apr 14, 2020, 01:14 PM IST
2 மணி நேரத்தில் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்... Swiggy அதிரடி... title=

கொரோனா வைரஸ் வெடிப்பிற்கு மத்தியில் இந்தியாவின் 125-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஸ்விக்கி புதிய மளிகை விநியோக சேவையைத் தொடங்கியுள்ளது.

நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக சில தேசிய பிராண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுடன் HUL, P&G, கோத்ரேஜ், டாபூர், மரிகோ, சிப்லா, விஷால் மெகா மார்ட் மற்றும் அதானி வில்மர்ஸ் ஆகியோருடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

மளிகைக் கடைகளில் கூட்டத்தைத் தவிர்ப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்குள் அத்தியாவசிய பொருட்களை வீட்டிலேயே விநியோகிப்பதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. இந்த செயல்பாட்டில், வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள கிடைக்கக்கூடிய மளிகை கடைகளை சரிபார்த்து, அத்தியாவசிய பொருட்களுக்கான ஆர்டர்களை பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த வாரம் முதல் அடுக்கு -1 மற்றும் அடுக்கு -2 நகரங்களில் ஸ்விக்கி மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் இப்போது நாடு முழுவதும் 125-க்கும் மேற்பட்ட நகரங்களில் 'மளிகை' குறிச்சொல்லை இயக்கியுள்ளது. இந்த செயல்முறை 
ஸ்விக்கியின் அதிகாரப்பூர்வ பய்யன்பாட்டிலும் தற்போது கிடைக்கிறது, அதைக் கிளிக் செய்த பிறகு அருகிலுள்ள எல்லா மளிகைக் கடைகளையும் நமக்கு காண்பிக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் கிடைக்கும் மளிகை பொருட்களை வாடிக்கையாளர்கள் ஸ்விக்கி விநியோகஸ்தர்கள் மூலமும் பெறலாம். 

அறிக்கையின்படி, இந்த புதிய செயல்முறையைச் சோதிக்க ஸ்விக்கி இரண்டு மணிநேரங்களுக்கு குறைவான விநியோக நேரத்தை வழங்குகிறது. இந்தியா முழுவதும் தற்போது முழு அடைப்பு வரும் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல ஆன்லைன் மளிகை விநியோக நிறுவனங்கள் விநியோக இடங்களுக்கு வெளியே உள்ளன, மேலும் சில விற்பனை நிலையங்கள் ஒரு வாரத்திற்கு பிறகு பொருட்களை வழங்கும் என அறிவித்துள்ளன. எனவே, இந்த முழு அடைப்பு நேரத்தில் ஸ்விக்கியின் இந்த சேவை பல வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த முழு அடைப்பு நேரத்தில் வரையறுக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களை மட்டுமே இந்த சேவை வழங்குகிறது.

Trending News