முறைகேடு காரணமாக தமிழகத்தில் 21 கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து!

முறைகேடு நடைபெற்றதால் தமிழகத்தில் 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.   

Last Updated : Apr 7, 2018, 10:38 AM IST
முறைகேடு காரணமாக தமிழகத்தில் 21 கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து! title=

முறைகேடு நடைபெற்றதால் தமிழகத்தில் 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், கடந்த 2013ல் நடந்தது. அப்போது தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் இம்மாதம் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிதாக உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்களுக்கான உத்தரவை தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சங்கங்களுக்கு மார்ச் 26 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 -ஆம் தேதி வரை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில், கூட்டுறவு தேர்தலில் முறைகேடு நடப்பதாக வந்த புகாரை அடுத்து தமிழகத்தில் 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ரத்து செய்து தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக 31 சங்கங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

Trending News