மகாநதி' படத்திற்கு குவியும் பாராட்டு: நெகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான 'மகாநதி' தெலுங்கில் இன்று வெளியாகியுள்ளது!  

Last Updated : May 9, 2018, 06:57 PM IST
மகாநதி' படத்திற்கு குவியும் பாராட்டு: நெகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்! title=

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான 'மகாநதி' தெலுங்கில் இன்று வெளியாகியுள்ளது. தமிழில் 'நடிகையர் திலகம்' எனும் பெயரில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருகிறார். சாவித்திரி வேடத்திற்காக தினமும் நான்கு மணி நேரம் மேக்கப் போட்டி நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அதேபோல, படத்தின் நாயகனா "ஜெமினி கணேசன்" வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமந்தா, நாகசைத்தன்யா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும், இந்த படத்தை அஸ்வின் நாக் இயக்கியுள்ளார். 

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடிகையர் திலகம் படத்திற்கு தணிக்கைக் குழுவினர் கிளீன் யு சான்றிதழ் அளித்ததையடுத்து, இன்று தெலுங்கில் 'மகாநதி' என்ற தலைப்பில் வெளியானது.

இந்த படத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக நடிகை சாவித்ரியை திரையில் அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ் என தெலுங்கில் விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. நிச்சயம் இந்தப் படத்திற்காக அவருக்குப் பல விருதுகள் கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும், இந்த படத்தைப்  பார்த்த  சாவித்ரியின் மகள் சாவித்ரியின் மகள் பல இடங்களில் கண்கலங்கி விட்டாராம். திரையில் நிஜமாகவே தனது அம்மா சாவித்ரியைப் பார்த்ததுபோலவே இருந்ததாகா, கூறி படம் முடிந்ததுமே சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷை பாராட்டி குறுஞ்செய்தியும் அனுப்பியிருக்கிறார்.  

Trending News