1971 போரை பாகிஸ்தானை நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் கொடுக்கும் பதிலடி பாகிஸ்தான் வரலாற்று புத்தகத்தில் இடம் பெரும் என இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.
எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் போரை விரும்பவில்லை என கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நேற்று முன்தினம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மந்திரிசபையின் அவசர கூட்டத்தை பிரதமர் நவாஸ் ஷெரீப் கூட்டினார்.
உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நேற்று முன்தினம் இரவு நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால் பாகிஸ்தான் இணையதளத்தில் வெளியாகியள்ள செய்தியில் நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த தாக்குதலின் போது 8 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் மற்றும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சந்து பாபு லால் என்ற இந்திய ராணுவ வீரர் பிடிபட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆகஸ்ட் 15-நம் தேதி நாட்டின் 60-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டத்தில் ஈடுபடலாம் என்று உளவுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.