சாலை தடுப்பில் டிரக் மோதி விபத்து: 17 பேர் பலி!

மஹாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் டிரக் மோதி விபத்துக்கு உள்ளனதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

Last Updated : Apr 10, 2018, 10:23 AM IST
சாலை தடுப்பில் டிரக் மோதி விபத்து: 17 பேர் பலி! title=

மஹாராஷ்டிரா: நெடுஞ்சாலை தடுப்பில் கட்டுப்பாட்டை இழந்த டிரக் மோதியதாள் அதில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் காயமடைந்தனர்.

மஹாராஷ்டிர மாநிலம் புனே - சதாரா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிரக் கந்தலா என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் அந்த டிரக்கில் பயணம் செய்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மேலும் இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அருகில் இருந்த மக்கள் மீட்டு பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்த காவல் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் பற்றிய மேலும் தகவல்கள் ஈதும் தெரிய வில்லை. இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Trending News