கரூரில் அதிமுக நிர்வாகி கடத்தல், ஒரு மணி நேரத்தில் மீட்பு

கரூரை அடுத்த வேலுச்சாமிபுரம் பகுதியில், மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளரான சிவராஜ் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில், இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர் சிலரால் காரில் கடத்தப்பட்டார்.

கடத்தப்பட்ட அ.தி.மு.க நிர்வாகி சிவராஜ் ஒரு மணி நேரத்திற்குள் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். சுக்காலியூர் காட்டுப்பகுதியில் போலீஸார் மற்றும் அ.தி.மு.கவினரால் அவர் மீட்கப்பட்டார். 

Trending News