தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக சிலைகள் திருட்டு நடைபெறவில்லை: ஜி.கிஷண் ரெட்டி

தமிழகக் கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளாக சிலைகள் திருட்டு நடைபெறவில்லை என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கோயில் சிலைகள் திருட்டு தொடர்பாக திமுக எம்பி கனிமொழி மக்களவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய கலை, கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்தார்.

Trending News