பிரெக்ஸிட்: புதிய நம்பிக்கையுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நேரப்படி சனிக்கிழமை மாலை 4:30 மணியளவில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 1, 2020, 06:45 AM IST
பிரெக்ஸிட்: புதிய நம்பிக்கையுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது title=

லண்டன்: உலக நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு (இந்திய நேரப்படி சனிக்கிழமை மாலை 4:30 மணியளவில்) பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்தது. இந்த வழியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்த முதல் நாடு பிரிட்டன். பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவு சுமார் 47 ஆண்டுகள் நீடித்தது. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், "இதை ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம்" என்று அழைத்தார்.

பிரெக்ஸிட் மீதான வாக்கெடுப்பு நடத்தி கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர், பிரிட்டன் நேற்று (வெள்ளிக்கிழமை) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்தது. பிரிட்டிஷ் பிரதமரின் அலுவலகமான டவுனிங் தெருவில் வியாழக்கிழமை அன்று ஒரு வீடியோ செய்தி பதிவு செய்யப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்த பின்னர் முதல் வெள்ளிக்கிழமை இது வெளியிடப்பட்டது.

பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரதமர் தேர்வு:
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான இங்கிலாந்து முடிவான பிரெக்ஸிட்டை கையில் எடுத்ததுடன், அதை கடைசி வரை கொண்டு வருவேன் சபதம் செய்ததன் மூலம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான ஜான்சன் கடந்த ஆண்டு நாட்டின் பிரதமரானார். இப்போது அவர் நாட்டின் புதிய தொடக்கத்திற்கான ஒரு வரலாற்று தருணம் என்று வர்ணித்துள்ளனர். இது மாற்றத்தின் தருணம். இந்த நாட்டை ஒற்றுமையாக வைத்து அதை முன்னோக்கி கொண்டு செல்வதே அரசாங்கமாக நமது வேலை. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இன்றிரவு ஒரு முடிவுக்கு வராத நேரம், ஆனால் ஒரு புதிய ஆரம்பம் எனக் கூறினார்.

1973 ஆம் ஆண்டில் இங்கிலாந்து இணைக்கப்பட்டது:
ஜான்சன் வடக்கு இங்கிலாந்தின் சுந்தர்லேண்டில் ஒரு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். அந்த  நகரம் தான் முதலில் ஜூன் 2016 இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ஆதரவை அறிவித்தது. பிரிட்டன் 1973 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்தது. பிரிட்டன் 47 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த குழுவிடம் இருந்து  விடைபெறுகிறது. இப்போது ஐரோப்பிய ஒன்றியம் 27 நாடுகளின் குழுவாக இருக்கும்.

பிரெக்ஸிட் என்றால் என்ன?
பிரெக்ஸிட் என்றால் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவது. ஐரோப்பிய ஒன்றியம் 28 நாடுகளின் அமைப்பாக இருந்தது. இந்த நாடுகளின் மக்கள் தங்களுக்குள் எந்த நாட்டிலும் வந்து வேலை செய்யலாம். இதன் காரணமாக, இந்த நாடுகள் தங்களுக்குள் சுதந்திர வர்த்தகத்தை செய்ய முடியும். பிரிட்டன் 1973 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்தது.

23 ஜூன் 2016 அன்று, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டுமா? என்று  பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அந்த நேரத்தில் 52 சதவீத வாக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும். என்றும், 48 சதவீத மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டும் என்றும் வாக்களித்தனர். நாடு தொடர்பான முடிவுகள் நாட்டிலேயே எடுக்கப்பட வேண்டும் என்று பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதன் பின்னர், லண்டன் பாராளுமன்றம் ஒரு நீண்ட விவாதம் நடைபெற்றது. தற்போது விடைபெற்றது பிரிட்டன்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News