வாலுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை...

மெக்ஸிகோவில் பிறக்கும்போதே 5.7 செ.மீ., நீளத்தில் பெண் குழந்தைக்கு இருந்த வாலை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 26, 2022, 03:45 PM IST
  • மனித வால்கள் இரண்டு வகைகளில் உள்ளன.
  • நிஜ வால், பொய் வால் என அவை அழைக்கப்படுகின்றன.
  • மெக்ஸிகோ குழந்தையிடம் நிஜ வால் தென்பட்டுள்ளது.
வாலுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை... title=

மெக்ஸிகோவின் வடகிழக்கு பகுதியில் சமீபத்தில், வாலுடன் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. மிகவும் மிருதுவாக தோல் உடன் இந்த வாலில், துளிர் முடிகள் இருந்தன. 5.7 செ.மீட்டர் நீளத்திற்கு இருந்த அந்த வால், 3 மீ.மீட்டரில் இருந்து 5 மீ.மீட்டர் வரையும், வாலின் கடைசிபகுதியை கூர்முனையாகவும் இருந்துள்ளது. 

அந்த குழந்தை நிறைமாதத்தில் பிறந்துள்ளது என்றும் கர்ப்பகாலத்தில் எவ்வித பிரச்சனைகளும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோருக்கு இது இரண்டு குழந்தை என்றும் முன்னதாக பிறந்த மகன் ஒருவன் ஆரோக்கியமாக இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | பள்ளிக்கூடங்களில் துப்பாக்கிச்சூடு : 3 பேர் பலி; 11 பேருக்கு காயம் - பதைபதைக்க வைக்கும் வீடியோ

முதுகுதண்டு எலும்பு முடியும் இடத்தில் அந்த வால் இருந்துள்ளது. பின்னர், குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்கு பின் அறுவை சிகிச்சை மூலம், குழந்தைக்கு வலியில்லாமல் அந்த வாலை அகற்றி விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மனித வால்களில், 'பொய் வால்' (Pseudo Tails) மற்றும் 'நிஜ வால்' (True Tails) என வகைமைகள் உள்ளன. இதில், பொய் வால் முதுகுதண்டு பிரச்சனையால் ஏற்படக்கூடியது. நிஜ வால், எலும்புகள் அற்று, சதை, ரத்த நாளங்களுடன் இருக்கும். ஆனால், மெக்ஸிகோவில் பிறந்த குழந்தைக்கு முதுகு தண்டில் பிரச்சனை இல்லை என்பது ஸ்கேன் மூலம் தெரிந்துள்லது. 

குழந்தைகளுக்கு 'நிஜ வால்கள்' 'மிகவும் அரிதானவை' என்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழு குறிப்பிட்டது, 2017ஆம் ஆண்டுவரை, இதுபோன்று 195 வழக்குகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில், மிக நீளமானது என்பது 20 செ.மீட்டருக்கு வால் இருந்துள்ளது. அவை பெரும்பாலும் சிறுவர்களிடமே காணப்படுகின்றன. 

சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களாகிய நாம் குரங்குகளிடம் இருந்து மனிதர்களாக பரிணமித்தபோது, நமது மூதாதையர்கள் வாலை இழந்தனர். சில நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களில், மனித வால்கள் புனிதமாகக் கருதப்பட்டு வழிபடப்படுகின்றன.

மேலும் படிக்க | நாஜி பாணியில் பாலியல் வன்புணர்வு செய்யும் வீடுகளில் வெள்ளைக்கொடி - ரஷ்யா அட்டூழியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News