காஷ்மீரில் அமைதியை குலைக்க தாலிபானுடன் கூட்டு சேர்கிறதா பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு?

1999 ஆம் ஆண்டு மசூத் அசார் விடுவிக்கப்பட்டார். அப்போதிருந்து, ஜம்மு-காஷ்மீரில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு உருவாக்கப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 28, 2021, 10:52 AM IST
காஷ்மீரில் அமைதியை குலைக்க தாலிபானுடன் கூட்டு சேர்கிறதா பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு? title=

புதுடெல்லி: தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தலைவர் மசூத் அசார் சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைவர்களை சந்தித்து ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் அவர்களது ஆதரவை கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் கந்தஹாரில் தாலிபான் அமைப்பின் மூத்த தலைவர் முல்லா அப்துல் கனி பராதர் உள்ளிட்ட தாலிபான் தலைவர்களை அவர் சந்தித்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதத்தை கட்டவிழ்க்க அவர் தாலிபான்களிடம் உதவி கோரினார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில்தான், ஆப்கானிஸ்தானின் (Afghanistan) பெரும்பாலான பிராந்தியங்களை தாலிபான் கைப்பற்றி, அந்த நாட்டின் மீதான தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்க ஆதரவு கூட்டுறவின் வீழ்ச்சி மற்றும் தாலிபான்களின் வெற்றி ஆகியவை குறித்து மசூத் அசார் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 16 அன்று "மன்சில் கி தரஃப்" (இலக்கை நோக்கி) என்ற தலைப்பில் ஜெயிஷ்-ஏ-மொஹம்மத் தலைவர் ம்சூத் அசார் எழுதிய கட்டுரையில், ஆப்கானிஸ்தானில் "முஜாஹிதீனின் வெற்றியை" அவர் பாராட்டினார்.

ALSO READ: காபூல் விமான தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி; IS மீது வான்வழி தாக்குதல்

பாகிஸ்தானின் (Pakistan) பஹாவல்பூரில் உள்ள மார்கஸில் (தலைமையகம்) JeM நிர்வாகிகள் மத்தியில் தாலிபான்களின் வெற்றிக்கு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து செய்திகளை பரப்பிக்கொண்டு இருக்கின்றனர்.

இஸ்லாமிய சட்டமான ஷரியாவை விளக்குவதிலும், சன்னி இஸ்லாத்தின் தியோபந்தி பள்ளி நெறிமுறைகளைத் தொடர்வதிலும், தாலிபான்கள் (Taliban) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது கருத்தியல் தோழர்களாகக் கருதப்படுகிறார்கள்.

1999 ஆம் ஆண்டு மசூத் அசார் விடுவிக்கப்பட்டார். அப்போதிருந்து, ஜம்மு-காஷ்மீரில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு உருவாக்கப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாடு தாலிபான்களின் கையில் சென்றதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில், பயங்கரவாத நடவடிக்கைகள் தூண்டப்படும் என்ற அச்சமும் உள்ளது. ஜெய்ஷ்-இ-முகமத் இயக்கத்துக்கும் தாலிபான் இயக்கத்துக்குமான கடந்தகால தொடர்பு மிகவும் வலுவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், தாலிபான் சமீபத்தில், ஆப்கானிஸ்தான் பிரதேசத்தை எந்த நாட்டிற்கும் எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளது.

ALSO READ: காபூல் விமான நிலையத்தில் நுழைந்த தாலிபான்கள், இராணுவ பொறுப்பிலும் பயங்கரவாதிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News