Ration Card New Rules 2022: ரேஷன் கார்டுதாரர்களுக்கு லாட்டரி; மலிவான விலையில் பொருட்களை அள்ளுங்கள்

Ration Card New Rules 2022: நாட்டின் ஏழை மக்களுக்கு இரண்டு வேளை ரொட்டி வழங்கும் நோக்கத்தில் உணவு இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 15, 2022, 11:44 AM IST
  • ரேஷன் கார்டு சமீபத்திய புதுப்பிப்பு நவம்பர் 2022.
  • ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
  • இந்த பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும்.
Ration Card New Rules 2022: ரேஷன் கார்டுதாரர்களுக்கு லாட்டரி; மலிவான விலையில் பொருட்களை அள்ளுங்கள் title=

நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு இரண்டு வேளை ரொட்டி வழங்கும் நோக்கத்தில் உணவு இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நியாய விலைக் கடையில் இருந்து ஏழைகளுக்கு மாதந்தோறும் தலா 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது. இது நாடு முழுவதும் பொருந்தும். அதன்படி மாநில அரசுகளும் ஏழைகளுக்கு பல்வேறு வழிகளில் உணவு தானியங்களை வழங்கி வருகின்றன. சமீப காலமாக, மகாராஷ்டிரா அரசு பண்டிகை காலத்தை முன்னிட்டு அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு 100 ரூபாய்க்கு முழு மளிகைப் பொருட்களை வழங்கத் தொடங்கியுள்ளது.

ரேஷன் பொருட்களில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கும்
தீபாவளியை முன்னிட்டு மகாராஷ்டிரா அரசு சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏழை மக்களுக்கு 1 கிலோ ரவை, நிலக்கடலை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ரூ.100க்கு வழங்கி வருகிறது மகாராஷ்டிரா அரசு. இதன் மூலம் ஏழைகள் மிகுந்த நிவாரணம் பெற்று வருகின்றனர். இதற்கிடையில் இந்த பலன் வறுமைக் கோட்டு ரேஷன் கார்டு வைத்துள்ள நுகர்வோருக்கு மட்டுமே கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | EPFO News: அதிகரிக்கிறதா இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் ஓய்வூதியம்? சமீபத்திய அப்டேட் இதோ

மத்திய அரசு இலவச ரேஷன் வழங்குகிறது
கொரோனா காலத்தில் இருந்து, ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்கு மத்திய அரசு 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்கி வருகிறது. கொரோனா நெருக்கடி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது, இதற்குப் பிறகும், டிசம்பர் வரை ஏழைகளுக்கு உணவு தானியங்களை அதிகரிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு: ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 ரொக்கம்
இதற்கிடையில் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது பற்றி தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த முறை 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், ரொக்கமாக ரூ.1,000 மட்டும் வழங்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியின் தாக்கம் பாடாய் படுத்துகிறதா? இந்த பரிகாரங்கள் கை கொடுக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News