ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி ஜாக்பாட், உடனே இதை படியுங்கள்

LPG Cylinder Price: மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ஒரு வருடத்தில் மூன்று சிலிண்டர்களை அரசு இலவசமாக வழங்கியது. இத்திட்டத்தின் கீழ், முதல் சிலிண்டர் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலும், இரண்டாவது ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலும், மூன்றாவது டிசம்பர் 2023 முதல் மார்ச் 2024 வரையிலும் இலவசமாக வழங்கப்படும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 26, 2023, 12:54 PM IST
  • ஒரு வருடத்தில் மூன்று சிலிண்டர்களை அரசு இலவசமாக வழங்கியது.
  • அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இலவச சிலிண்டர்.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி ஜாக்பாட், உடனே இதை படியுங்கள் title=

ரேஷன் கார்டு சமீபத்திய செய்திகள்: நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராகவும், உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிப்பவராகவும் இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆம், அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் போலவே புதிய நிதியாண்டிலும் மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். அதன்படி மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ஒரு வருடத்தில் மூன்று சிலிண்டர்களை அரசு இலவசமாக வழங்கியது. இத்திட்டத்தின் கீழ், முதல் கேஸ் சிலிண்டர் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலும், இரண்டாவது ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலும், மூன்றாவது டிசம்பர் 2023 முதல் மார்ச் 2024 வரையிலும் இலவசமாக வழங்கப்படும்.

சிலிண்டரை நிரப்பும்போது பணம் செலுத்த வேண்டும்
இந்த திட்டத்தின் கீழ் சிலிண்டரை நிரப்பும்போது பயனாளிகள் பணம் செலுத்த வேண்டும். பின்னர், அரசு தரப்பில் இருந்து அவரது கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் உள்ள அனைத்து அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களின் மேப்பிங் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் நீங்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், தேவையான அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்த பிறகு, கார்டுதாரர் சிலிண்டர் பணத்தை எரிவாயு ஏஜென்சியில் டெபாசிட் செய்ய வேண்டும். பின்னர் டிபிடி மூலம் கார்டுதாரரின் கணக்கில் பணம் மாற்றப்படும்.

மேலும் படிக்க | அதிகளவில் ஓய்வூதியம் பெற நினைக்கும் ஊழியர்கள் செய்ய வேண்டியவை!

ஒதுக்கீடு தானாகவே முடிவடையும்
இதன்படி, அந்தியோதயா அட்டை வைத்திருப்பவர் நான்கு மாதங்களுக்குள் கேஸ் சிலிண்டரை நிரப்பவில்லை என்றால், வாடிக்கையாளரின் இலவச ஒதுக்கீடு தானாகவே காலாவதியாகிவிடும் என்ற விதியும் உள்ளது. அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களிடம் கேஸ் இணைப்பு இல்லை என்றால், அவர்கள் புதிய இணைப்பு எடுக்க வேண்டும். கேஸ் இணைப்பு இருந்தால், ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும். அப்படி கேஸ் இணைப்புடன் ரேஷன் கார்டுடன் இணைப்வில்லை என்றால் இந்த பலன் கிடைக்காது.

இதற்கிடையில் அந்தியோதயா அட்டைதாரர்களின் பட்டியல் ஏற்கனவே மாநில அரசால் தயாரிக்கப்பட்டது. மாவட்ட வாரியாக அந்தியோதயா அட்டைதாரர்களின் பட்டியல் உள்ளூர் கேஸ் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 1,84,142 அந்தியோதயா அட்டைதாரர்கள் பயனடைவார்கள்.

மேலும் படிக்க | ரயில் பெட்டிகளில் உள்ள ஐந்து இலக்க எண்ணின் ரகசியம்..கட்டாயம் தெரிஞ்சிகோங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News