எல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டம்: ஒருமுறை பிரீமியம் செலுத்தி மாதம் ரூ.20,000 பெறலாம்!

Lic Jeevan Akshay Plan: ஜீவன் அக்ஷய் திட்டத்தில் குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 85 வயதுடையவர்கள் வரை பாலிசியை எடுக்கலாம், நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என இரண்டிலும் இந்த திட்டத்தை பெறலாம்.  

Written by - RK Spark | Last Updated : Dec 3, 2022, 08:26 AM IST
  • எல்ஐசி பல பாலிசி திட்டங்களை வழங்கி வருகிறது.
  • ஓய்வூதியத்திற்கு சேமிக்க எல்ஐசி வழிவகை செய்கிறது.
  • இந்த திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும்.
எல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டம்: ஒருமுறை பிரீமியம் செலுத்தி மாதம் ரூ.20,000 பெறலாம்! title=

Lic Jeevan Akshay Plan: இந்திய மக்களிடம் பிரபலமாக உள்ள எல்ஐசி எனும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் முதலீடு செய்வதில் மக்கள் பலரும் ஆர்வம் கட்டி வருகின்றனர், மக்களின் எதிர்கால தேவைக்கு ஏற்ப எல்ஐசி பல பாலிசி திட்டங்களை வழங்கி வருகிறது.  இதில் முதலீடு செய்வதன் மூலம் நிலையான வருமானம் கிடைப்பதையோடு முதலீடு செய்யப்படும் பணத்திற்கும் பாதுகாப்பது கிடைக்கிறது.  எல்ஐசி வழங்கும் ஒவ்வொரு விதமான திட்டங்களிலும் குறைந்தபட்ச தொகை முதல் அதிகபட்ச தொகையை டெபாசிட் செய்து வைத்துக்கொள்ளலாம்.  முதலீட்டாளர்கள் தங்கள் ஓய்வூதியத்திற்கான கார்பஸை உருவாக்குவதற்கு சேமிக்க தொடங்க எல்ஐசி வழிவகை செய்கிறது.  தற்போது எல்ஐசி வழங்கும் ஜீவன் அக்ஷய் யோஜனா திட்டத்தில் முதலீட்டாளர்கள் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாக பெற விரும்பினால் முதலில் இந்த திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | e₹-R: இந்தியாவின் அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சி டிஜிட்டல் ரூபாய் புழக்கத்தில்

ஜீவன் அக்ஷய் திட்டத்தில் குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 85 வயதுடையவர்கள் வரை பாலிசியை எடுக்கலாம், நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என இரண்டிலும் இந்த திட்டத்தை பெறலாம்.  இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1 லட்சம் முதலீடு செய்யலாம்.  கூட்டு சேர்ந்து இந்த திட்டத்தில் பங்களிக்கலாம், ஆனால் அந்த இரண்டு நபரும் தனித்தனியாக ரூ.1 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.  இந்த திட்டத்தில் எவ்வளவு அதிகமாக முதலீடு செய்கிறீர்களோ அந்த அளவிற்கு அதிகமாக மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைக்கும்.  இதில் பத்துக்கும் மேற்பட்ட வருடாந்திர ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

உதாரணமாக ஜீவன் அக்ஷய் திட்டத்தில் ஒரே நேரத்தில் ஒரு முதலீட்டாளர் ரூ.9,16,200 டெபாசிட் செய்கிறார் என்றால் அவர் மொத்த முதலீட்டின் வருமானமாக மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.6,859 பெறுவார்.  அதுவே அந்த முதலீட்டாளர் ஆண்டுக்கு ரூ.86,265 பெறுவார், அதுவே அரையாண்டு அடைப்படையில் அந்த முதலீட்டாளருக்கு ரூ.42,008 கிடைக்கும் மற்றும் காலாண்டு அடிப்படையில் ரூ.20,745 கிடைக்கும்.  மேலும் மாதந்தோறும் ரூ.20,000 ஓய்வூதியமாக பெற விரும்பினால் நீங்கள் இந்த திட்டத்தில் ரூ.40 லட்சம் முதலீடு செய்யவேண்டும்.

மேலும் படிக்க: ஆன்லைன் ஷாப்பிங்கில் நடைபெறும் பித்தலாட்டம்! உஷார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News